Wednesday 23 December 2015

களவியுகம்

காமம் : இதுதான் இன்று சமுகத்தில் பெண்களின் நிலையை சீர்குலைக்கும் விஷயங்களில் முதன்மை ஆனதாக இருக்கிறது.

உண்மையில் பெண்கள் படைக்க பட்டது வெறும் காம சுகம் பெறுவதற்காக தானா? காமம் என்பது வெறும் தேகம் சார்ந்த மோகம் நிறைந்த சுகம் மட்டுமேவா? இல்லை.

ஒரு ஆண் தன் ஆண் குறியை பெண் குறியோடு இணைக்கையில் உண்டாகும் உணர்வு மட்டுமே காமம் அல்ல.

மனசும் மனசும் உரசுகையில் உண்டாகும் உணர்வான காதல் போல உடலும் உடலும் உரசுகையில் உண்டாகும் உணர்வே காமம்.

எப்படி காதல் என்பது ஒருவர் தமது மனதினில் இருந்து வெளிப்படும் அன்பை புரிந்தவரிடம் மட்டுமே உணருகிறாரோ, காமத்தையும் அவரிடமே பெற வேண்டும். அவ்வாறு மனம் உணர்ந்த உள்ளங்களிடையே மனமுவந்து காமம் கொள்கையில் அவ்வுறவில் பல உறவுகளின் சங்கமம் இடம்பெறும்.

உறவின் போது சின்ன சின்ன குறும்புகளோடு செய்திடும் சீண்டல்கள் நண்பர்கள் போலும்,
விழியோடு விழி பேச இதழ்கள் இணைகையில் காதலர்கள் போலும்,
உறவின் முடிவில் ஒருவர் நெற்றியில் ஒருவர் மாறி மாறி முத்தம் இடுகையில் தந்தையை போலும்,
அன்பின் அசதியில் தோள்களில் சாய்த்து அரவணைப்பதில் தாயை போலும் உணர்தல் ஏற்படும்.

இத்தகைய உணர்வுகள் இருவரின் மனதிலும் "இனி நீ என்பதும் நான் என்பதும் நாமே" என்றுணர்த்தி இறுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் இருகரம் கொண்டு இறுக்கி அணைக்கையில் "வாழ்வின் எந்த நிலையிலும், உன்னை விட்டு நீங்காது உன்னோடு இணைந்திருப்பேன்" என்ற எண்ணம் ஏற்படும்.

மேலும் காமம், ஆண்-பெண் இருவரும் சமம் என்னும் எண்ணத்தை உடல்கள் வழியே ஆழ்மனதில் அழுத்தமாய் பதிக்கும். அன்பை மனதார பகிரும் ஆண்/பெண் இடம் மட்டுமே ஒரு பெண்/ஆண் இத்தகைய உணர்வை காமத்தில் பெற முடியும்.

மற்றபடி சதையில் சந்தோசம் நாடும் அனைவரும் மார்கழி மாதத்தில் நாக்கை தொங்க போட்டு கொண்டு திரியும் நாய்க்கு ஒப்பானவர்களே.

காமத்தை போதையாகவும், அந்த போதை தரும் கருவியாக பெண்களையும் எண்ணாது..ஆண்-பெண் உறவின் உன்னதத்தை உடல் மற்றும் மனதின் வழியே கற்பிக்கும் கருவியே களவி என உணர்ந்து இருபாலினருக்கும் சமுகத்தில் சமத்துவம் ஏற்படும் வகையில் வரும் ஆண்டுகளில் வாழ்வோம்.

Sunday 22 November 2015

வாழ்க்கை வாழ்வதற்கே

Situation two-A young man with his positive outlook in life.

SONG:

உனக்கென எனக்கென 
தனி உலகம் இல்ல.
இதை உணர்ந்திட்டா 
நமக்குள்ள கலகம் இல்ல.

இருப்பதோ
ஓர் உலகம்.
வாய்ப்பதோ
ஓர் வாழ்க்கை.
மனமிருந்தால் நமக்கு வானம் இல்லை.

கரை தொடாமல் அலை போவதில்லை.
கறை படாமல் யாரும் வாழ்ந்ததில்லை.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
சுற்றம் துறந்தால் வாழ்க்கை இல்லை.

இழக்கத்தான் உயிருண்டு,
ஜெயிக்கத்தான் உலகுண்டு,
வாழ்க்கைதான் நமக்குண்டு,
வா வா வா...வாழ்ந்து பாப்போம்.
சேர்ந்தேதான் உலகை ஜெயிப்போம்.

எனக்குள் ஒருத்(தீ)

Situation one- A young man from Chennai sees a girl and instantly loses his heart. More than her beauty, her resilience in her eyes strikes him the most. His heart soars at this unknown feeling that surely must be love.

SONG:

தீ தீ நீயா..
அந்த ஒருத்தி நீயா..
என் மனதை விழியால் கடத்தி சென்ற ஒருத்தி நீயா.

வலியினில் துடித்திடும் 
விழியினில் தெரிந்திடும்
உன் உறுதிக்கு வியந்தேன் தோழியே..

எதிர்வரும் தடைகளை
எதிர்த்திடும் துணிவினை
உன் செயல்வழி உணர்ந்தேன் தோழியே..

எதையும் தாங்கும் இதயம் உனக்கு..
உன்னை தாங்கும் இதயம் எனக்கு..
உன்மேல் கொண்டேன் காதல் கிறுக்கு..
ஏற்றுகொள்ளடி தோழியே தோழியே.. 

தீ தீ நீயா..
அந்த ஒருத்தி நீயா..
என் மனதை விழியால் கடத்தி சென்ற ஒருத்தி நீயா..

Tuesday 3 November 2015

வக்கிரத்தின் வலி

வணிக நகர வாலிபன்
கணினியில் தொலைத்த கண்ணை மீண்டெடுத்து
இரவு நேர உலா செல்ல,

கண்ணெதிர உலகத்தை உள்ளடுக்கும் அலைப்பேசியில்
நவநாகரிக பெண் ஒருத்தி அளவளாவ..
வைத்த கண் வாங்காது
உடலின் அமைப்பை உடையின் அளவோடு ரசித்தபடி
"செம பீஸ்" என கூறிக்கொண்டு நடை பயணிக்க,

கண்ணுக்கு விருந்தளித்த மனசு வயித்துக்கும் விருந்தளிக்க தூண்ட
தள்ளுவண்டியில் நடுத்தர வர்கத்தின் நட்சத்திர உணவகத்தில்
சில பல தோசைகளை முழுங்கிய வாறே
அன்னமிட்ட அஞ்சலையின் அங்கத்தை
உணவின் சூட்டோடு சூடாக ரசித்தபடி
மனதுக்குள் "நாட்டு கட்டை" என்று எண்ணியவன்,

புகை போட பொட்டிகடை செல்ல
அருகில் தெரு சுத்தம் செய்யும் பெண்ணின்
சரிசெய்யப்படா ஆடைவழியே தெரியும் இடையை
இமை கொண்டு இச்சித்த படி "சூப்பர் பிகரு" என நகர்ந்தவன் கண்ணில்

கணினி கம்பெனி கன்னி காரில் வந்திறங்க,
ஆங்கிலேயர் கீழ் பணிபுரிபவள்
ஆங்கிலேயனுக்கே பணிபுரிபவலாய் எண்ணி "ஐயிட்டம்" என முனுகிகொண்டே நடக்க.
 அலைப்பேசியில் மணி அடிக்க,
"ஏரியா பசங்க கிண்டல் பண்ணிச்சின்னு தங்கச்சி தற்கொலை பண்ணிகிட்டா"ன்னு அம்மா குரல் ஒலிக்க,

ஒரு கணம் அவன் மனதில் பெண் குறித்த தன் வக்கிரத்தால் வலி உண்டாவதை உணர்ந்தான்.