Friday 26 October 2012

சிரிப்பு செய்திகள்

வணக்கம்.சிரிப்பு செய்திகள் வாசிப்பது உங்கள் வாரணாசி வாழவந்தான்.இன்றைக்கு சிக்கிய செய்திகள்.


  • பெட்ரோல் விலை உயர்வால் ஈயம் பித்தாளையில் அதிகரிக்கும் அந்நிய முதலீடு
  • விலைவாசி உயர்வை கண்டித்து சாகும் வரை உண்ணும்விரதம் - ரவுசு ராமசாமி
  • கொசுவை ஒழிக்க கொசக்சி பசப்புகழ் - தமிழ்நாடு கொசு ஒழிப்பு வாரியம் அறிவிப்பு 
  • மின்சார வெட்டை உயர்த்த கோரி திருப்பூரில் திருடர்கள் சாலை மறியல்
  • குதிரை லாடத்தின் தலைமை பொறுப்பு ஜல்சானந்தவுக்கே - ஜகா வாங்கும் ஜாங்கிரி நாதர் 
  • ஒரு கொசுவின் கொலைவெறி - நான் கொசு:சொல்கிறார் ராஜகுஜ்லி 
  • கிட்டிபுல்லில் கின்னஸ் சாதனை செய்வேன் - துடிக்கிறார் கிட்டிபுல் கிச்சா

இனி தொடர்வது சுரிவான செய்திகள்

உலக செய்திகள்


ஈயம் பித்தாளையில் அந்நிய முதலீடு:
             பெருகி வரும் பெட்ரோல் விலையால் ஈயம் பித்தாளை இமாலய வளர்ச்சி பெற்றுள்ளது.சந்தைக்கு வந்த கார் முதல் சந்துல நிற்கும் பைக் வரை அனைத்தும் காயலான் கடைக்கு படையெடுக்கிறது.ஆகையால் பன்னாட்டு நிறுவனங்களின் பார்வை பழைய ஈயம் பித்தாளை மேல் விழுந்துள்ளது.ஆகையால் அந்நிய முதலீடும் அதிகரித்துள்ளது.

சாகும் வரை உண்ணும்விரதம்:
             உயர்ந்துகொண்டே வரும் விலைவாசி பிரச்சனையால் பிடித்த உணவை ஒரு பிடி பிடிக்க முடியவில்லை.ஆகையால் தலைமை செயலகத்தின் முன் சாகும்வரை உண்ணும்விரதம் இருக்க போவதாக போராட்டத்தில் குதித்துள்ளார் ரவுசு ராமசாமி.இந்த போராட்டத்திற்கு எதிர் வீட்டுக்காரர் முதல் எதிர் கட்சிகாரர் வரை அணைத்து மக்களும் ஒன்று கூடி இரவு பகல் பாராமல் அயராது முயன்ற வரை தங்கள் ஆதரவை தந்து ஆசையை அடக்குகின்றனர்.


தமிழக செய்திகள்


கொசுவுக்கு கொசக்சி:
            "இந்த கொசு தொல்லை தாங்கமுடிலடா..எங்க போனாலும் கடிக்குது..மருந்தடிச்சு கொல்லுங்கடா" என கதறும் மக்களை கொசுவிடம் இருந்து காப்பாற்ற வருகிறார் கொசக்சி பசபுகழ்.இவர் கொசுமுட்டையில் ஆம்லெட் போட்டு உலக கவனத்தை தன பக்கம் திருப்பியவர்.ஜப்பான்,சீனா போன்ற நாடுகளே தேடும் இவரால் மட்டுமே கொசுவை ஒழிக்க முடியும் என்று தமிழக கொசு ஒழிப்பு வாரியம் கருதி கேட்டு கொண்டமையால் அவர் கொசு ஒழிக்க வருகிறார்.

மின்சாரவெட்டை உயர்த்தக்கோரி சாலை மறியல்:
             தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால் தங்கள் தொழில் வளமும் வாழ்வாதாரமும் பெரும் அளவில் உயர்ந்துள்ளதாக கருதும் தமிழக திருடர் நல சங்கம்,மின்வெட்டை குறைக்கும் தமிழக அரசின் திட்டத்தை தீயை வைக்குமாறும்,மேலும் மின்வெட்டை பெருக்கி எங்கள் வாழ்வை செழிக்க வைக்க வேண்டுமாறு கூறி சாலை மறியல் செய்தனர்.இதற்க்கு வேலூர்,பாளையங்கோட்டை,புழல் சிறைச்சாலை கைதிகளும் ஆதரவளித்து உள் இருப்பு போராட்டம் செய்தனர்.

குதிரை லாடம் ஜல்சானந்தாவிர்க்கே:
             குதிரை லாடத்தின் தலைமை பொறுப்பிற்கு ஜல்சானந்தாவை நியமித்த  ஜாங்கிரி நாதர்,அதற்க்கு தான் பணம் வாங்கவில்லை என்றும்.ஒன்லி செக் அண்ட் DD மட்டுமே வாங்குவதாவும் கூறினார்.மேலும்,எந்த குதிரையையும் கும்பகர்ணம் அடிக்க வைக்கும் பிக்காளித்தனம் அகில உலகத்திலேயே ஜல்சானந்தாவிர்க்கு மட்டுமே உள்ளதாவும்.ஆகையால் தான் யாம் அவரை குதிரை லாடத்தின் தலைவராய் நியமித்ததாக கூறினார்.


சினிமா செய்திகள் 

   கொசுவின் கொலவெறி: 
                தான் வாங்கி வாய்த்த ஜூஸை குடித்தும்,அதை தட்டிகேட்ட தன்னை ஜூஸாக பிழிந்தும் சாகடித்த வில்லன் வினு சக்ரவர்த்தியை எப்படி கதாநாயகன் லொள்ளு மனோகர் கொசுவாக வந்து கொன்னு போடுகிறார் என்பதே "நான் கொசு" படத்தின் கதை என்கிறார் இயக்குனர் ராஜகுஜ்லி.பெரும் பொருட்செலவில் கூவம் நதிக்கரையில் எடுக்கப்பட்ட டுயட்டும்,கண்ணம்மாபேட்டை  சுடுகாட்டில் எடுக்கப்பட்ட கிளைமேக்ஸ் சண்டை காட்சியும் இப்படத்தின் ஹைலைட் என்றும் கூறினார்.

விளையாட்டு செய்திகள் 


கிட்டிபுல்லில் கின்னஸ்:
             தெருமுனையில் கிட்டிபுல் ஆடிவந்த தாம் பாரிமுனையில் நடைபெற்ற கிட்டிபுல் ஆட்டத்தில் வென்றதே தனக்கு திருப்புமுனையாக அமைந்ததாக கூறும் கிட்டிபுல் கிச்சா,கிட்டிபுல்லில் கின்னஸ் சாதனை செய்தே தீருவேன் என்ற துடிப்பில் பலர் மண்டையையும்,வீட்டு ஜன்னலையும் உடைத்து கடுப்பில் மாட்டி உள்ளார்.எல்லாருக்கும் ஏழரையாக இருக்கும் இவரை ஏர்வாடிக்கு அனுப்பமாறு கோரிக்கை வைத்துள்ளனர் பாதிக்கப்பட்ட மக்கள்.


வணிக செய்திகள் 


வழக்கம் போல் விலைவாசியும்,அந்நிய முதலீடும் ஆப்பு வைத்ததால் வாடிக்கையாளர்கள் வேடிக்கை பார்ப்பதோடு சென்றனர்.ஆகையால்,ஏற்கனவே கடுப்பில் இருந்த முகம்,நொந்த முகமாகி இறுதியில் இறங்குமுகமாய் ஆனது.

அந்நிய முதலீட்டை காட்டிலும் தங்க முதலீடு பெருகி வருவது "வராத மழைக்கும் விடாது குடை பிடிப்பது" போன்ற மக்களின் "விடாத வறுமையிலும் கெடாத நகையாசையை" காட்டுகிறது.இதனால் தங்கம் விலை 
தாறுமாறாக ஏறி கொண்டு இருக்கிறது.இதற்க்கு நேர்மாறாக இருக்கும் என கருதப்பட்ட வெள்ளி விலையும்,தடம் மாறாது தகதிமிதோம் ஆடுகிறது 

இத்துடன் இன்றைக்கு சிக்கிய செய்திகள் முடிவடைகிறது.நன்றி வணக்ஹம்.


Thursday 25 October 2012

மக்காலைய மன்னர்

காவலாளி:ராஜாதி ராஜ,கூஜாதி கூஜ..ராஜ குலோத்துங்க,ராஜ குலமும் தூங்க...மா மன்னர் வரார்..வரார்..வரார்...

மன்னர்:அனைவரும் அமருங்கள்

மந்திரி:எவருமே எழவில்லையே மன்னா.

மன்னர்:அஹ,அப்படியா..ஹ்ம்ம்.அப்போ அனைவரும் எழுந்துருங்கள்.

(அனைவரும் எழுந்த பின்னர்)

மன்னர்:இப்போது அனைவரும் அமருங்கள்.எப்படி மந்திரியாரே

மந்திரி:ஆகா,அருமை மன்னா அருமை.எழாதவரை எழ வைத்த எழுச்சி திலகம் வாழ்க.

சபையினர்:வாழ்க.

மன்னா:ஹாஹா..இருக்கட்டும் இருக்கட்டும்...ஆமாம் இன்று எனை காண எவெரேனும் வந்துள்ளனரா?

மந்திரி:ஆம் மன்னா.உங்களிடம வேடிக்கை காட்ட வேண்டும் என கவிஞர்கள் வந்துள்ளனர்.

மன்னர்:என்னது வேடிக்கை காட்ட கவிஞர்களா..என்ன இது விந்தை..

மந்திரி:ஆம் மன்னா.உங்களின் வீர,தீர செயல்களை பற்றிப்பாடி உங்களின் சிறப்புகளை பறைசாற்ற  போகிறார்களாம்.கேட்கவே வேடிக்கையாக உள்ளதல்லவா.ஹஹஹஹஹா

மன்னர்:மந்திரியாரே..

மந்திரி:அஹ,மன்னிக்கவும் மன்னா.யாரங்கே,அவர்களை அழைத்து வாரும்.

கவிஞர் கசக்கிமுத்து(கசக்கி):சபையினருக்கும்,மா மன்னருக்கும் வணக்கம்...

மன்னர்:வணக்கம்.தங்கள் பெயரென்னவோ?

கசக்கி:கசக்கிமுத்து மன்னா.தங்களின் புகழை பாடி பரிசல் பெறவே யாம் வடுகபட்டியில் இருந்து வண்டியோட்டி வந்தோம்.பாடவா மன்னா?

மன்னர்:ஹ்ம்ம்..ஆரம்பியுங்கள்...

கசக்கி:மன்னா..மக்காலையா..மக்காலையா...யாஹு.யாஹு..சே...
மன்னா..மக்காலையா..மக்காலையா..யாஹு..யாஹு.சே...

மந்திரி:மன்னா....

மன்னா:என்னா?

மந்திரி:உங்களை இழிவுபடுத்திவிட்டான் மன்னா.

மன்னா:என்ன சொல்கிறீர் மந்திரியாரே?

மந்திரி:ஆம் மன்னா.மக்காலையா என்றால் மக்கா இல்லையா என்று பொருள்படும்.யாஹு என்றால் யாராவது என்று அர்த்தம்.சே என்றால் சொல்லுங்கள் என்று அர்த்தம்.அவன் மன்னர் மக்கா இல்லையா என்று யாரவது சொல்லுங்களேன் எனப்பாடி இழிவுபடுத்தி உள்ளான் மன்னா.

மன்னர்:ஆக்ஹா,உனக்கு என்ன ஒரு இறுமாப்பு.யாரங்கே..இவனை குண்டுசட்டிக்குள் குப்புற போட்டு கொப்பரை எண்ணெய் ஊற்றி வேகும்வரை  வறுத்தெடுத்து,வாடும்வரை கொழுப்பெடுத்து இவன் நாட்டைவிட்டு ஓடும்வரை உயிர் எடுக்கவும்.

காவலாளி:ஆகட்டும் மன்னா...

மன்னர்:அடுத்தது யார்?

கவிஞர் பஞ்சாபிகேஷன்(பஞ்சு):அனைவருக்கும் வணக்கம்.அனைவரையும் அரவணைக்கும் அரசருக்கும் வணக்கம்.

மன்னர்:ஆகா,என்ன ஒரு அவையடக்கம்.தங்கள் பெயரென்னவோ?

பஞ்சு:என் பெயர் பஞ்சாபிகேஷன்.நஞ்சை இன்றி புஞ்சை இன்றி பண்ருட்டியில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த பஞ்சாபிகேஷன்.தங்களிடம் பாடி பஞ்சம் போக்கவந்த வழிப்போக்கன் மன்னா.

மன்னர்:மிக்க மகிழ்ச்சி.பாடும்.

பஞ்சு:என் உச்சி மண்டைல சுர்ருங்குது.உன்னை நான் பார்க்கைல கிர்ருங்குது...கிட்ட நீ வந்தாலே டர்ருங்குது..கர்ருங்குது....

மந்திரி:மன்னா...

மன்னா:இப்போ என்னா?

மந்திரி:அவன் பஞ்சத்திற்கு காரணம் நீர் என்று அவன் தங்களை சாடுகிறான் மன்னா.

மன்னர்:எப்படி கூறுகிறீர்கள் மந்திரியாரே?

மந்திரி:மன்னா..அவன் பாடியது என்ன.."என் உச்சி மண்டைல சுர்ருங்குது"..அதாவது உணவுக்காக அலைவதால் அவன் உச்சந்தலை உஷனமாக உள்ளதாம்.அடுத்து "உன்னை நான் பார்க்கைல கிர்ருங்குது"..அதாவது பசியால் வாடும் அவன் உங்களை காணும் போது தலை சுற்றுகிறதாம்..அடுத்து "கிட்ட நீ வந்தாலே டர்ருங்குது"..அதாவது அவனை பசியால் வாடவைக்கும் நீங்கள் அருகில் வந்தால் எரிச்சல் வருகிறதாம்...கர்ருங்குது..அதாவது இப்படி தரமற்ற ஆட்சி நடத்தும் தங்களை கொலை செய்ய தோன்றுகிறதாம்.

மன்னா:அவன் பாடியதை விட பெரிதாக உள்ளதே.இது உண்மையிலே அவன் பாடியதன் பொருளா..இல்லை என்னைபற்றி தாங்கள் எண்ணியதன் பொருளா?

மந்திரி:ஐயகோ..என் மீது ஐயமா...அன்னமிட்ட அரசருக்கு அநியாயம் செய்வேனா...

மன்னா:நம்பிவிட்டோம் உம்மை.யாரங்கே...இந்த பஞ்சாபிகேஷனை பஞ்சாலையில் போட்டு பஞ்சு பஞ்சாய் ஆக்கி பஞ்சாமிர்தம் ஆக்கி முடிந்தவரை நக்குங்கல்.முடியாவிட்டால் உரலில் போட்டு  ஆட்டுங்கள்....ஹ்ம்ம்..அடுத்தது யார்?

பணிப்பெண்:மன்னா...

மன்னா:ஆஹ,யார் இந்த பதுமை?

மந்திரி:அரண்மனை பணிப்பெண் மன்னா.

மன்னா:அப்படியா..அப்போது இன்று முதல் இவள் என் அந்தரங்க பணிப்பெண் ஆக்குங்கள் மந்திரியாரே.

மந்திரி:மன்னா..நான் மந்திரி.

மன்னா:என் பேச்சை கேக்காவிட்டால் நீ எந்திரி.

மந்திரி:ஆ...இன்றுமுதல் நீ இவர் அந்தபுரத்து சுந்தரி.

மன்னர்:ஹஹஹஹா...இப்போதுதான் நீ என் மந்திரி..ஹ்ம்ம்..அடுத்தது யாரு?

கவிப்பெண் கயல்விழி(கயல்):அனைவருக்கும் வணக்கம்.என் பெயர் கயல்விழி.யாம் காஞ்சிவரத்தில் இருந்து வந்துள்ளோம்.

மன்னா:வணக்கம்.ஆமாம்..ஏன் வேறு திசை நோக்கி திரும்பி உள்ளீர்.

கயல்:எங்கள் குலவழக்கப்படி எங்கள் முகத்தை வெளியாட்களோ,அவர்கள் முகத்தை நாங்களோ பார்ப்பதில்லை.சரி,தங்களை பற்றி யாம் இயற்றிய பாடலை பாடவா மன்னா?

மன்னா:இல்லறம் போற்றும் பெண்ணுக்கு இலக்கியமும் வருமா..பலே பலே...எங்க பாடும் கேட்போம்..?

கயல்:கருப்பு பேரழகா..கண்ணுக்குள்ள நிக்குறியே ஜோரா ..கிளிச்சிபுட்ட  நாரா..
கருப்பு போல ஏதும் பூமியில இல்லை..நீ அந்த கண்ணன்னோட  புள்ளை...

மன்னா:அடி ஆத்தா..ஆத்தா..குங்குமப்பூ சோத்தை தான்...தின்னுபுட்டு உங்கம்மா பெத்தாலா...
அடி..செழிப்பா..ஜொலிப்பா ..வெள்ளை கலரை காட்டிதான்....கருப்பு பையனை கவுத்துபுட்டேடி...

மந்திரி:ஆகா,அருமையாக பாடுனீர்  மன்னா...

மன்னா:எம்மைவிட இவள் குரல்  இனிமையாக இருந்தது மந்திரியாரே.அவளை கண்களில் காந்தம்  உள்ளது போல் தோன்றுகிறது.இவளை நான் மனம் முடிக்கலாம் என்று எண்ணுகிறேன்..

மந்திரி:மன்னா அரசியார் கோபம் கொள்வார்..

மன்னா:நாம் அரசியாரை கொன்று விடுவார்...

மந்திரி:மன்னா..அவர் இந்நாட்டிற்கும் தங்களுக்கும் தலைவி.

மன்னா:என்னை நச்சரிக்கும் குலவி ...நலிந்து போன கிழவி..அவளா என் தலைவி.இல்லை.இனி இவள்தான் என் தலைவி..கயல்விழி என் தலைவி.என்ன சொல்கிறார்?

கயல்:தங்கள் சித்தம் என் பாக்கியம்..

மன்னா:மிக்க மகிழ்ச்சி...திரும்பி நின்றது போதும்.எங்கே இவ்வண்ணம் திரும்பி உன் இன்முகத்தை காட்டு...

(திரும்பி முகத்தை காட்டியதும்)

மன்னா,மந்திரி:அஹ,தலைவி...

அரசி:தலைவி அல்ல..நச்சரிக்கும் குலவி ...நலிந்து போன கிழவி...யாம் கோபம் கொண்டால் நீர் என்னை கொள்வீரோ...இப்போது யாம் கோபமாக உள்ளோம் எங்கே எம்மை கொள்ளுங்கள் பார்ப்போம்.

மன்னா:தலைவியாரே...

அரசி:தங்களுக்காக இன்னொரு பாடல் உள்ளது மன்னா..பாடவா...சிரிச்ச முகத்தை சிதற வைக்க,முறைச்ச கண்ணை மூட வைக்க,இளிச்ச பல்லை இடிச்சு நொறுக்க,அடிச்ச கைய முறிச்சு உடைக்க...கொலைவெறியோட நெருங்க நெருங்க நெருங்கவே.....சூர  காத்த  போல வராடா ..கிறுக்கு பிடி பிடிக்க வராடா......உன் எழும்பு உடைய உடைய உடைய..விளையாட வரா காஞ்சனா...


Monday 22 October 2012

பேங்க் ஆப் புருடா

சக்தி:அந்த ஐ.ஜீக்கு மனசுல பெரிய இவுருன்னு நினைப்பு...

ஜான்:எவுருன்னு..

சக்தி:அதான்யா பெரிய..அது..என்னமோ சொல்வாங்களே..அது..

ஜான்:சரி விடு..அதான் வரலையே.

சக்தி:அது வரலைன்னாலும் பரவாலை..இவன் வரமாற்றானே.எதுனாலும் நம்மளைதான் முன்னாடி அனுப்புறான்.

ஜான்:என்னடா இப்படி பேசுற.அவுருபெரிய ஆளுடா.

சக்தி:என்னடா பெரியாளு.பேர பாரு.ஐ.ஜி சகாயம்.இவுரு ஐ.ஜி சகாயம் இல்லை.எல்.ஜி பெருங்காயம்...பெருங்காயம் கூட இல்லை.வெங்காயம்.நறுக்கு நறுக்குன்னு வெட்டனும் நல்லா.

ஜான்:அப்போகூட நம்ம கண்ணுதாண்டா எரியும்.

சக்தி:அதுவும் சரிதான்...அங்க ஊரே பேங்க் முன்னாடி நின்னு என்னாச்சோ ஏதாச்சோன்னு பரபரப்பா கிடக்கு.இவுரு என்னடானா நேருல வராம ச்சேர் போட்டு உக்காந்துட்டு ஸ்டேட்மென்ட் குடுக்குறாரு பிரஸ்சுக்கு.அந்த பிரஸ் நமக்கு குடுக்கிற ஸ்ட்ரெஸ் சமாளிக்கிறதே பெரிய வேலை.

ஜான்:புரிது.ஆனா நாம என்ன பண்ண.இவுரு சொல்ற வேலைய பார்த்துதான் ஆகணும்.அதான் நம்ம நிலைமை.

சக்தி:வாழ்க்கை ஒரு டவுசர் டா.அதை போட்டவன் தோய்ப்பான்...தோய்ச்சவன்  கிழிப்பான்...இவன் இன்னும் தோய்க்கல...சீக்கிரமே தோய்ப்பான்.தோய்ச்சு கிழிப்பான்.கிழிக்க வைப்பேன்.

ஜான்:அவுரு கிழிக்கிறது இருக்கட்டும்.நாம போய் நம்ம வேலைய பார்ப்போம்.இல்லைன்னா நம்ம டவுசர் கிழியும் டா.

சக்தி:பாயிண்ட்.அவுருக்காக இல்லைனாலும்,நம்ம டவுசருகக்காகவாச்சும் எதையாச்சும் கயிட்டுவோம்.இல்லாங்காட்டி நம்ம டவுசர கயிட்டிடுவானுக.

(இடம் - பேங்க் ஆப் புருடா)

ஜான்:(மைக் பிடித்தபடி)பேங்க் சுத்தி போலீஸ் இருக்காங்க.இனி உங்களால தப்பிக்க முடியாது.மரியாதையா சரணடைஞ்சிடுங்க.

மைக்கேல்:சாரி இன்ஸ்பெக்டர்,நாங்க முன்வச்ச கால பின் வைக்க மாட்டோம்.

சக்தி:பின் வைக்க வேண்டாம்.அப்படியே ஒரு பத்து,பதினஞ்சு அடி முன்னாடி வச்சு கேட் வரைக்கும் வந்தா போதும்.

மைக்கேல்:அப்படி வந்தா எங்களை விற்றுவீங்களா?

சக்தி:நிச்சயமா.பேங்க் பின்பக்கமா சுத்திட்டு வந்தாலும் விற்றுவோம்.ஆனா காசை வாங்கிட்டு தான் விடுவோம்.

ஜான்:சக்தி,என்ன பேசுற.ச்சா,காசு வாங்கிட்டு விட நான் ஒன்னும் தப்பான போலீஸ்காரன் இல்லை சக்தி.

சக்தி:முட்டாள்.காசோட அவங்களை விட நான் ஒன்னும் மடத்தனமான போலீஸ் இல்லை.

மைக்கேல்:என்ன போலீஸ் புத்திய காண்பிக்கிருயா சக்தி?

சக்தி:என்கிட்ட இருந்தா காண்பிப்பேன்.ஆனா இல்லை.அதான் போலீஸ் புத்திய காண்பிச்சேன்.எப்படி இருக்கு?

மைக்கேல்:உன்னவிட கேவலமா இருக்கு..

சக்தி:ஆனா உன்னவிட பெட்டரா தான் இருக்கும்.

மைக்கேல்:சக்தி,நீ யாருகிட்ட மோதுறேன்னு தெரியும்ல.மைக்கேல் கிட்ட.

சக்தி:எவன்னா இருந்தாலும் சுடுவேண்டா.

மைக்கேல்:நான் டிசோசாவோட ஆளு.

சக்தி:டிசோசாவோ இருந்தா என்ன.தீஞ்சி போன தோசையா இருந்தா என்ன.அவனையும் சுடுவேண்டா.

ஜான்:சக்தி..பேங்க் பக்கத்துல இருக்கிற ஒரு லாட்ஜ் இருக்கு.

சக்தி:அதுக்கு என்ன..அந்த லாட்ஜ்ல ரூம் போட்டு ரெண்டு லாட்ஜ் உடுலாங்குரியா.

ஜான்:அட நல்ல ஐடியா.ஆனா இப்போ அதை சொல்ல வரலை.அந்த லாட்ஜ்ல வழியா பேங்க் உள்ள போய் அவங்கள அட்டாக் பண்ணலாம்குறேன்.

சக்தி:இத ஏன்டா முன்னாடியே சொல்லலை.சரி,லாட்ஜ்ல போய் ஒரு ரூம் புக் பண்ணிட்டு அப்படியே பேங்க் உள்ள போவோம்.கம் ஆன்.

(பேங்க் உள்ள போய் மெதுவாய் மைக்கேல் இருக்கும் அறைக்கு சென்றவுடன்)

ஜான்,சக்தி:ஹான்ட்ஸ் அப்.

மைக்கேல்:வெல்கம் சக்தி அண்ட் ஜான்.எப்படியும் நீங்க இங்க வருவீங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்.

சக்தி:முன்னாடியே தெரியுமா...அப்புறம் ஏன்டா நாங்க உக்கார ஒரு ச்சேர் கூட போடாம வச்சுருக்க இந்த ரூம்ல.

மைக்கேல்:என் முன்னாடி யார் உக்காந்தாலும் எனக்கு பிடிக்காது.

சக்தி:அப்போ உனக்கு பின்னாடி போட்டு வைக்க வேண்டிதானடா.

மைக்கேல்:சு,வீண்பேச்சு வேண்டாம்.நமக்குள்ள ஒரு டீல் வச்சுப்போம்.என்னை நீங்க தப்பிக்க விட்டா உங்களுக்கு இதுல இருந்து ஒரு ஷேர் தரேன்.

சக்தி:நாங்க உக்காரதுக்கே ச்சேர் தராத நீயா ஷேர் தர போற.

மைக்கேல்:இப்படியே எத்தன காலம் தான் உயர் அதிகாரிகள் பேச்சுக்கு அடங்கி உடங்கி உக்காந்திட்டு இருப்பீங்க.எப்போதான் நிமிர்ந்து நிக்க போறீங்க?

ஜான்:அதான் இப்போ நின்னுகிட்டு இருக்கோம்ல.

மைக்கேல்:அஹ,விளையாட்டு பேச்சு வேண்டாம்.பீ சீரியஸ்.நான் கொடுக்கிற ஷேர் வாங்கிட்டு எங்காச்சும் வெளியூர் போய் வசதியா வாழலாம்.நல்லா யோசிங்க.உங்க முடிவு தான் என் முடிவு.என்ன சொல்றீங்க?

(சிறிது நேரம் யோசித்த பிறகு)

சக்தி:ஹ்ம்ம்..யோசிச்சிட்டேன்.சாரி,எங்களால முடியாது.

மைக்கேல்:நல்லா யோசிச்சுதான் சொல்றியா?

சக்தி:நான் ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேன்னா,அப்புறம் என் பேச்சை இந்த ஜான்னே கேட்கமாட்டான்.அப்புறம் நான் எங்க கேட்குறது.

மைக்கேல்:அப்போ இதான் உங்க பதிலா?

ஜான்:பதில் இல்லை.இதான் எங்க முடிவு.

மைக்கேல்:ஆல்ரைட்.ஏற்கனவே சொன்ன மாதிரி உங்க முடிவு தான் என் முடிவு.சோ....பாய்ஸ்...

(ஆட்கள் துப்பாக்கியோடு நாளா பக்கமும் உள்ளே நுழைய)

மைக்கேல்:சாரி சக்தி.ஒத்துகிட்டு இருந்தா நல்லபடியா வாழ்ந்து இருக்கலாம்.பட் நவ்,இட்ஸ் டூ லேட்.

சக்தி:ஒத்துகிட்டு இருந்தாலும் நாங்க டூ(ரெண்டு) லேட் தான்.

ஜான்:என்ன சொல்ற சக்தி?

சக்தி:அவன் நம்ம முடிவு தான் அவன் முடிவுன்னு சொன்னன்ல.அதுல "நம்ம முடிவு"ன்னு சொன்னது நம்மோட சாவுதாண்டா.

மைக்கேல்:சரியா சொன்ன சக்தி.கேவலமா இருந்தாலும்,கேர்புல்லா தான் இருக்கு உன் போலீஸ் புத்தி.

சக்தி:கேவலமான புத்தினாலும் உன்னைவிட பெட்டர்ன்னு சொன்னேன்ல.

மைக்கேல்:பெட்டரா இருந்தும் நோ யூஸ்.இப்போ நீங்க சாகபோறீங்கலே.பாய்ஸ்,சீக்கிரம் கதைய முடிங்க....ஹே...என்ன பண்றீங்க?

 சக்தி:நீதானே சொன்ன கதைய முடிக்க சொல்லி.அதான்....ஹஹஹஹா,என்ன பாக்குற.இவங்கெல்லாம் எங்காளுங்க.நீ யோசிக்க கொடுத்த டைம்ல உன் ஆளுகளை எங்காலுக பார்சல் பண்ணிடாங்க.அப்பவே சொன்னேன்ல.என் போலீஸ் புத்தி கேவலமா இருந்தாலும்,உந்தை விட பெட்டரா இருக்கும்னு....என்ன பாக்குறீங்க.அர்ரெஸ்ட் ஹிம்.

(எல்லாம் முடிந்து வெளியே வந்த போது)

பிரஸ்:வாழ்த்துகள் சார்.வேகமாவும்,விவேகமாவும் செயல்பட்டு மிக திறமையா கொள்ளையரை புடிச்சிட்டீங்க.

ஐ.ஜி:ஹஹஹா,தேங்க்ஸ்,அது எங்க கடமை.அவர்களை புடிக்க என் தலைமையில் ஒரு தனிப்படி அமைச்சு சரியான வகைல திட்டம் வகுத்ததே இதுக்கான காரணம்.மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்.எங்கிருந்தாலும் ஓடி வருவேன்.

சக்தி:(ஓடி வந்துட்டாலும்....எழுந்துருச்சு நிக்குறதுக்கே ஒரு மணி நேரம் ஆகுது.இதுல ஓடி வந்து கைட்டி கிழிக்குறதுக்குள்ள அவனுக அடுத்த பேங்க் கொள்ளை அடிக்க போய்டுவாணுக)

ஜான்:என்னடா இப்படி ஆகிடுச்சு.கஷ்டப்பட்டு பிடிச்சது நாம.இவுரு நோகாம நோபில் பரிசு தட்டிட்டு போறாரு.

சக்தி:இந்த பெருங்காயம் இப்படி பண்ணும்னு தெரிஞ்சுதான் வரும்போதே உனக்கு தெரியாம அந்த லாட்ஜ்ல ரூம் புக் பண்ணிட்டேன்.இவன் நோபில் வாங்குன என்ன,போன் பில் வாங்குன என்ன.வா நாம ஜாலியா ரெண்டு புல் வாங்கி என்ஜோய் பண்ணலாம்.

ஜான்,சக்தி:போட்டது பத்தல.மாப்புள இன்னொரு குவாட்டர் சொல்லுடா.அப்படியே மேட்டருசொல்லுடா...

ஐ.ஜி:அப்படியே எனக்கும் சேர்த்து சொல்லுடா...

ஜான்,சக்தி:சார்....

ஐ.ஜி:இந்த பேங்க் ராப்பரி பத்தி நினச்சு நினச்சே உடம்பும்,மைண்ட்டும் டயர்ட் ஆகிடுச்சு.அதான் எனக்கும் சேர்த்து சொல்ல சொன்னேன்.எல்லாரும் சேர்ந்து என்ஜோய் பண்ணுவோம்.என்ன ஓகே வா?

சக்தி:(திருடன புடிக்க வாயானா எங்களை அனுப்புறது.சரக்கடிக்க போறோம்னா மட்டும் கூட வாரது.இவுரு ஓசில குடிக்கிறதுக்கு எங்களை ஒகேய்வான்னு கேக்குது பாரு..இதெல்லாம்)

ஐ.ஜி:என்ன?

சக்தி,ஜான்:எஸ் சார்.


Monday 8 October 2012

நீங்களும் ஆகலாம் ஒரு கேடி






ஹாய் பிரெண்ட்ஸ்,எல்லாருக்கும் வணக்கம்

பஸ்ஸில் பெண்ணின் மேல் கண் வைப்போரின் பர்ஸ் மேல் கை வைன்னு பிரபல கேடி கபாலி அவர்கள் சொல்லிருக்காரு.
இவர் 1959ல சென்ட்ரல் ஜெயில்ல பிறந்து,வேலூர் ஜெயில்ல வளர்ந்தவர்.1979-2009 வரைக்கும் பல கேடி வேலை பார்த்து கில்லாடியா இருந்தவர்.
அவுரு அனுபவத்துல சொன்ன வார்த்தையே அது.அதாவது  பஸ்ல சைட் அடிக்கிறவன் கிட்ட பிக் பாக்கெட் அடிச்சாதான்   மாட்டாமா இருப்போம்.ஏன்னா அவன்தான் பீல் ல ஜொள்ளு விட்டு பாக்கெட்ல கை விடுறத கண்டுக்காம கிடப்பான்னு சொல்லிருக்காரு.
சோ,பொது மக்களே பஸ்ஸில் முதல உங்க சேப்டிய பாருங்க,அப்புறம் பியுட்டிய பார்க்கலாம்னு சொல்லிட்டு இந்த கேம் ஷோவ ஸ்டார்ட் பண்ணுவோம்.

ஏமாற்றம் ஒன்றே ஏமாறாதது.உங்கள் காசை அமுக்க போகும் கேடிகளோடும்,கேள்விகளோடும் உங்கள் மொக்க தயா.லெட்ஸ் பிளே நீங்களும் ஆகலாம் ஒரு கேடி.

இன்று நம்மளோடு ஆட போறவர் பாக்கெட் பாண்டி.இவரு கடந்த 10 வருஷமா பிக் பாக்கெட் அடிப்பவரு.ஆனா போலீஸ் இவர கேடி என்ற மதிப்பு தராம வான்டட் லிஸ்ட்ல இருந்து இக்னார் பண்ணிடாங்க.சோ,கேடி ஆகியே தீரனும் என்ற லட்சியத்தோட வந்துருக்காரு.லெட்ஸ் கிவ் ஹிம் எ பிக் ஹேன்ட் வித் அவுட் ரிங்(lets give him a big hand without a ring).

தயா:வணக்கம் திரு.பாக்கெட் பாண்டி

பாண்டி:வணக்கம்  அண்ணாத்த   

தயா:போட்டிக்கு போறதுக்கு முன்னாடி உங்கள பத்தி சொல்லுங்க

பாண்டி:அதான் நீயே சொல்லிட்டியே.அப்பால நான் என்னத்த சொல்ல.நேரா ஆட்டத்துக்கு போய்டலாம்.

தயா:வாவ்,செம ஆர்வத்துல இருக்கீங்க.கூல்.ஓகே..போட்டியோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் சொல்லிடுறேன்.உங்களுக்கு மொத்தம் 5 கேள்விகள் கேட்கப்படும்.ஒவ்வொரு கேள்வியும் சரியா பதில் சொல்லணும்,இல்லேன்னா நீங்க எலிமினேட் ஆகிடுவீங்க.

பாண்டி:என்னது எலிக்கு மேட்டா?

தயா:எலிக்கு மேட் இல்லை.எலிமினேட்.அதாவது ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படுவீர்.

பாண்டி:ஒ,ஆட்டத்துல இருந்து அவுட் ஆறதா.அஹ ரைட் அண்ணாத்த.அப்பாலைக்க மேல சொல்லு 

தயா:உங்களுக்கு ஒரு லைப் லைன் இருக்கு.

பாண்டி:தோ பாரா,லைப் லைன்னா.என் வுட்டுல லேன்ட் லைன் கூட இல்ல அண்ணாத்த.இங்க என்னடான்னா லைப் லைன் எல்லாம் கீது..ஆமா இதுக்கு சார்ஜ் இல்லைல.

தயா:ஹாஹா,நோ நாட் அட் ஆல்.

பாண்டி:என்னது நோ டெட்டால் அஹ?

தயா:இட்ஸ் நாட் அட் ஆல்.ஓகே.அப்படினா அதெல்லாம் இல்லைன்னு அர்த்தம்.

பாண்டி:அஹ ரைட் பா

தயா:பர்ஸ்ட் லைப் லைன்,ஆடியன்ஸ் போல்.நெக்ஸ்ட்,போன் ஆன் பிரெண்ட்.உங்களுக்கு கேள்விக்கான பதில் தெரிலேன்னா,விலகுறதா இருந்தா நான் பிக்ஸ் பண்ணுறதுக்கு முன்னாடி சொல்லலாம்.ஓகே

பாண்டி:டன்

தயா:ஓகே கைஸ்,லெட்ஸ் பிளே நீங்களும் ஆகலாம் ஒரு கேடி.

ஜீனியஸ்,திரு.பாக்கெட் பண்டிக்கான முதல் கேள்வி ப்ளீஸ்.

ஆயா சுட்ட வடைல காக்கா சுட்ட வடை எது?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ் 

A)மெது வடை  B)மசால் வடை
C)ஆமை வடை D)தயிர் வடை

நல்லா யோசிச்சு சொல்லுங்க.இதுக்கு முன்னாடி எங்கயாவது காக்கா 
வடை திருடி பார்த்துருக்கீங்களா.

பாண்டி:எங்கக்கா திருடி பார்த்துருக்கேன்.ஆனா காக்கா திருடி பார்த்ததில்லை சார்.

தயா:ஒ உங்கக்கா டூ திருடியா?

பாண்டி:2 இல்லை சார்.ஒன் அக்கா தான்.அதுதான் என் வாத்தியாரு.சோக்கா ப்ளேட் போடும் தெரியுமா.ஒருதபா நீ வந்து பாரு,சோக்கா கிழிக்கும் உன் பாக்கெட்ட.என்னங்குற?

தயா:ஹே..நோ.நோ தேங்க்ஸ்.நாம விளையாட்ட பாப்போம்.பதில் சொல்லுங்க

பாண்டி:ஹ்ம்ம்.B மசால் வடை சார்.

தயா:ஆர் யு சூர்.B தான்னு எப்படி சொல்றீங்க?

பாண்டி:சாப்பாட்டுல மசாலா இருந்தா தான் எல்லாருக்கும் புடிக்கும்.ஏன்,சினிமால மசாலா இருந்தா தான் கூட்டமே கூடுது.அப்போ வடைல மசாலா இருந்தா காக்கா கூடாதா என்ன.அதான் சொல்றேன் மசால் வடை.நீ மிக்ஸ் பண்ணு ச்சா பிக்ஸ் பண்ணு.

தயா:ஓகே.ஜீனியஸ்,ப்ளீஸ் பிக்ஸ் ஆப்ஷன் B) மசால் வடை.

வடை மிஸ் ஆனாலும்,உங்க விடை தப்பாகலை.யு ரைட்.இட்ஸ் B)மசால் வடை.சூப்பர்ப் 

பாண்டி:அஹ குஜாலா கீது அண்ணாத்த.அஹ நெக்ஸ்ட்டு

தயா:உங்களுக்கான அடுத்த கேள்வி.ஜீனியஸ் ப்ளீஸ்.

யாரோட பேச்சு விடிஞ்சா போச்சு?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்

A)குடிகாரன் B)ஆட்டோக்காரன்   
C)கட்சிக்காரன் D)கடன்காரன்

பாண்டி:இது நம்ம ஏரியா அண்ணாத்த.A)குடிகாரன் தான் கரெக்ட்டு ஹேன்சர்.பிக்ஸ் பண்ணிக்கோ

தயா:அதெப்படி யோசிக்காம சொல்றீங்க?

பாண்டி:அண்ணாத்த,ஆட்டோக்காரன் பேச்சு மீட்டர் மேல காசு வச்சதோட பூடும்.கட்சிக்காரன் பேச்சு கட்சி மீட்டிங்கோட  பூடும்.கடன்காரன் பேச்சு கடன்னோ இல்லை கடன்காரனையோ தீர்த்துட்டா பூடும்.ஆனா குடிகாரன் பேச்சு மப்பு இருக்கிற வரைதான்.நைட் ஏத்துனா மார்னிங் பூடும் அண்ணாத்த மப்பு.அப்போ A தான் ரைட்டு..எப்புடி?

தயா:வாவ்..பென்டாஸ்டிக்..இதுக்கு மேல யாருக்காச்சும் இதுல மப்பு இருக்கா சாரி டவுட் இருக்கா..எஸ் யு ஆர் ரைட்.இட்ஸ்  A)குடிகாரன்.

பாண்டி:ஆளு மப்புல இருந்தாலும்,சொல்லுல தப்பு இருக்காது.அதான் பாக்கெட் பாண்டி.


தயா:சூப்பர் பாண்டி.இதே மாதிரி ஸ்டெடியா ஆடுங்க.உங்களுக்கான அடுத்த கேள்வி,ஜீனியஸ் ப்ளீஸ்.  

ஆன்மீகத்தில் ஈடுபட ஒருத்தர் எதை விட வேண்டும்?

உங்களுக்கான ஆப்ஷன்ஸ்

A)பணம்  B)மானம் 
C)குட்டி  D)புட்டி 

நல்லா யோசிச்சு சொல்லுங்க 

பாண்டி:போன் ஆன் பிரெண்ட் சார்.என் பிரெண்ட் கண்ணம்மாபேட்டை கந்தசாமிக்கு பேசணும் பா.

தயா:ஓகே ஜீனியஸ்,கண்ணம்மாபேட்டை கந்தசாமிக்கு லைன் கொடுங்க
ஆமா அவுரு என்ன பண்றாரு?

பாண்டி:அவுரு கண்ணம்மாபேட்டைல ஆஷ்ரமம் வச்சுருக்காரு.

தயா:அவுரும் சாமியா?

பாண்டி:அப்படின்னு சொல்லிப்பான்.

(லைன் ரீச்சுடு.கந்தசாமி என்டர்ஸ் இன்டூ கான்வர்சேஷன்)

தயா:வணக்கம் திரு.கண்ணம்மாபேட்டை கந்தசாமி,நான் மொக்கை தயா,நீங்களும் ஆகலாம் ஒரு கேடில இருந்து பேசுறேன்.உங்க பிரெண்ட் பாக்கெட் பாண்டிக்கு உங்க ஹெல்ப் தேவபடுது

கந்தா:என் ஹெல்ப்பா,என்ன CD எதாவது வேணுமா பாண்டி?

பாண்டி:ஐயையோ உன்னோட CDயும் வேண்டாம்,உன்கூட இருக்கிற லேடியும் வேண்டாம்.கேட்கிற கேள்விக்கு பதில மட்டும் சொல்லு போதும்.

கந்தா:சரி சரி..சொல்லு?

பாண்டி:சாமியாரா இருக்கனும்னா எத டீல்ல விடனும்?

A)பணம்  B)மானம் 
C)குட்டி   D)புட்டி 

கந்தா:இதுல என்ன டவுட்..B)மானம் தான்.

பாண்டி:என்னப்பா சொல்ற.பதில் கரிக்டா?

கந்தா:அட,இம்மா வருஷமா இந்த தொழில் பன்னுறேன்னா எப்படி.மானத்தை வுட்டதால தான.B தான் ரைட்.

பாண்டி:அப்போ ஞானம் கீனம்னு ஏதோ சொல்வாங்களே.அது வேண்டாமா?

கந்தா:ஞானத்தை வச்சு நாக்கு கூட வழிக்க முடியாது.மானம் தான் ரைட்டு.

பாண்டி:அஹ ரொம்ப தேங்க்ஸ் நைனா

கந்தா:அப்புறம் ராத்திரி நம்ம ஏரியாவாண்ட வர்றது

பாண்டி:இல்லபா.நைட் 10-12 மினிஸ்டர் வீடு,அப்பால 12.30-1.45 MLA வீடு.அப்புறமா 2-4 நகை கடை.புல் பிஸி.அப்பால ப்ரீயா  இருக்க சொல்ல வறேன்.சரியா.பை

கந்தா:அப்போ சரி...ஆஹ மொக்கை தயா சார்,நீங்க வாரீங்களா?

தயா:ஆஹ..நானா..வேண்டாம் சாமி..நானும் நைட் பிஸி.

பாண்டி:தோ பாரா..நீ எந்த ஏரியா அண்ணாத்த?

தயா:ஐயோ,அதெல்லாம் இல்லைப்பா.நைட் தூங்கிடுவேன்.அத சொன்னேன்.

கந்தா:குழந்தாய்,நல்லா இரு.நான் வருகிறேன்.

தயா:ரொம்ப சந்தோசம் சாமி,போய்ட்டு வாங்க..உஸ்ஸு ஷப்பா...அஹ..வெல்,அப்போ B பிக்ஸ் பண்ணவா?

பாண்டி:அதுல என்ன டவுட்.B தான்.சாமி வாக்கு பொய்யாகுமா.வேணும்னா மீண்டும் போன் அடிச்சு கேளு.

தயா:மீண்டுமா.நோ..நோ..டவுட்.சும்மா கேட்டேன்.ஓகே ஜீனியஸ் ப்ளீஸ் பிக்ஸ் B............யாஹ் இட்ஸ் ரைட்.கங்கிராட்ஸ்...
இன்னும் 2 கேள்விகள் பாண்டி.லைப் லைன் இல்லை.கவனமா ஆடுங்க
ஓகே ஜீனியஸ்,நெக்ஸ்ட் கொஷின் பார் பாக்கெட் பாண்டி ப்ளீஸ்.

யாரை கண்டால் பேயும் இறங்கும்?
ஆப்ஷன்ஸ்

A)உன்னை  B)என்னை 
C)நாயை  D)பெண்ணை 

டைம் இருக்கு.நல்லா கவனமாபடிச்சு யோசிச்சு பதில் சொல்லுங்க

பாண்டி:உன்னை னா உங்களை..உங்களை கண்டா உங்க வீட்டு வாட்ச்மேன் கூட இறங்கமாட்டான்.என்னை கண்டா என் வீட்டு நாய் கூட அடங்காது.அந்த நாயா கண்டா நானும் அடங்கமாட்டேன்..ஹ்ம்ம்ம்........அப்போ பொண்ணு தாங்க.இதுக்கு இன்னொரு காரணமும் கீது.போன வாரம் எங்க ஏரியால ஒரு பையன பேய் புடுச்சிச்சி.என்னனமோ பண்ணாங்க..ஹ்ம்மம்ம்ம்ம்..ஒன்னும் சரிப்படல.அப்போ என் பொஞ்சாதி போய் சவுண்ட் வுட்டா பாருங்க,பேயே அரண்டு போய் வோடிபோச்சி.அதான் சொல்றேன் D தான் ரைட்.

தயா:உறுதியாத்தான் சொல்றீங்களா?

பாண்டி:அட என் பொஞ்சாதி மேல சத்தியமா சொல்றேன் அதாங்க.

தயா:ஓகே ஜீனியஸ்,ப்ளீஸ் பிக்ஸ் D........எக்ஸ்செலன்ட்.யு ஆர் ரைட்.வெல் பிளேயிங் மிஸ்டர்.பாக்கெட் பாண்டி.லாஸ்ட் கொஷின்.சரியா சொன்னா நீங்க கேடி.கம் ஆன் மேன்.
உங்களுக்கான கடைசி மற்றும் கேடி ஆவதற்கான கொஷின்,ஜீனியஸ் ப்ளீஸ்.

கல்லடி பட்டாலும்_____________ படக்கூடாது?

அது என்ன.ஆப்ஷன்ஸ் ப்ளீஸ் ஜீனியஸ்

A)செருப்படி  B)பிரம்படி 
C)கண்ணடி  D)நெத்தியடி 

பாக்கெட் பாண்டி,உங்களை கேடி ஆக்கபோகும் கேள்வி.பதட்ட படாம,நிதானமா யோசிச்சு பதில் சொல்லுங்க.

பாண்டி:ஒரே குழப்பமா இருக்கு சார்

தயா:என்ன குழப்பம்,எதுல குழப்பம்?

பாண்டி:இதுல இருக்கிற எல்லா அடியும் நான் பட்டுருக்கேன்.அதான் குழப்பம்.

தயா:ஒ இன்டரெஸ்டிங்.

பாண்டி:பஜார்ல ஒரு பையன் நிஜார உருவிட்டேனு அவங்க ஆத்தாகாரி என்னை செருப்பால அடிச்சா.அப்பால ஒரு ஸ்கூலு டீச்சர் வுட்டுல திருட சொல்ல மாட்டிகினேனா,அந்த வாத்தி பெரம்பாலையே அடி அடின்னு அடிச்சு நொறுக்கிட்டான்.அப்பப்போ பஸ் ஸ்டான்ட்ல பொண்ணுகள கண்ணடிச்சு கன்னத்துல அடிவாங்கிருக்கேன்.அப்பால திருப்பதில ஒரு மொட்டை மண்டைகிட்ட ஆட்டிய போட சொல்ல மாட்டிக்க,அந்த மொட்டை மண்டையால என் நெத்தில அடிச்சான் பாரு.மூணு புல் அடிச்சா கணக்கா தலை கிர்ர்ரர்ர்ர்ருங்குச்சி ...இப்படி எல்லாமே பழக்கமா.அதான் குழப்பம்

தயா:நெறைய அடி வாங்குனா,பெரிய கேடி ஆகலாம் பாக்கெட் பாண்டி.தைரியமா ஆடுங்க.நீங்க வாங்குன அடி,உங்களை கேடி ஆக்கும்.நல்லா யோசிங்க 

பாண்டி:அஹ்ஹ்ஹ்ஹ...சார் C தான் ஹேன்சர்.அத்த பிக்ஸ் பண்ணுங்க முதல

தயா:நம்பிக்கையா சொல்றீங்களா.பிக்ஸ் பண்ணவா..எதை வச்சி C தான் ரைட்டுன்னு சொல்றீங்க.

பாண்டி:சார் பல பொண்ணுகளை கண்ணடிச்சு செருப்படி,கல்லடி எல்லாம் வந்கிருக்கேன்னு சொன்னேன்ல.அதுலாம் கூட பெருசா வலிக்கல சார்.ஆனா ஒரு சில வருஷத்துக்கு முன்னாடி,ஒரு பொண்ணு என்னை பார்த்து கண்ணடிச்சுதுன்னு அவளை ஓகே பண்ணேன் பாருங்க.அதுதான் சார் இன்னைக்கு வரைக்கும் வலிக்குது

தயா:அப்படியா யாரு அவுங்க..இப்போ என்னை பண்றாங்க?

பாண்டி:அவுங்க ஒன்னியும் பண்ணல.நான்தான் அவங்களுக்கு எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கேன்

தயா:என்னை சொல்றீங்க?

பாண்டி:அது வேறயாருமில்ல சார்.என் பொஞ்சாதி தான் .தெரியாம மாட்டிகிட்டு தினம் தினம் அவஸ்தை படுறேன்.இந்த பொஞ்சாதிகலே இப்படிதான் சார்.பிக்ஸ் பண்ணுங்க சார்..பிக்ஸ் பண்ணுங்க..

தயா:சாரி மிஸ்டர்.பாக்கெட் பாண்டி.ஜீனியஸ்,ப்ளீஸ் பிக்ஸ் C.......................................................................................வாவ்...நீங்க வாங்குன அடி,பட்ட கஷ்டம் வீண் போகலை.எஸ்,யு ஆர் ரைட் பாண்டி.யு ஆர் தி கேடி..கங்கிராட்ஸ் பாக்கெட் பாண்டி.

பாண்டி:ஆத்தா  நான் பாஸ் ஆகிட்டேன்...என் பொஞ்சாதிகலே எனக்கு கிடைச்சா ஒரே நல்லது இதான்.ஐய்யா ஜாலி

தயா:ஐயோ நீங்க காலி

பாண்டி:என்ன அண்ணாத்த சொல்ற?

தயா:திரும்பி பாரு,உன் பொண்டாட்டி

பாண்டி:அஹ,பங்கஜம்...எப்போமா வந்த?

பங்கஜம்:நீ என்னை பேய்ன்னு சொல்லும்போதே வந்துட்டேன்யா.ஏன்யா நான் உனக்கு பேயா...என்ன கட்டுன நாளுல இருந்து கஷ்டபடுறீகளோ.அதுக்கு முன்னாடி என்ன டாடா மாதிரி டாப்புல இருந்தியோ.

பாண்டி:பங்கஜம்..சும்ம்மா லுலுலாயி..எல்லாம் கேடி ஆகுறதுக்குதான் செல்லம்.மாமா உன்னை அப்படி சொல்வேனா பங்கு.

பங்கஜம்:ஒஹோ,கேடி ஆகுறதுக்கா.மவனே,சொல்றதெல்லாம் சொல்லிட்டு.கடைசில பங்குன்னு பம்புறது.இப்போ உன்னை நொங்குற நொங்குல உனக்கு ஊதப்போறாங்க பாரு சங்கு... 

பாண்டி:அஹ,பங்குஊஊஊஊஊஊஊஊஊஊஊ.....

Thursday 4 October 2012

ரவுசு பலன்

மேஷம்:
      ரேஷன் கல்லில் ரோஷம் காட்டும் மேஷ ராசி நண்பர்களே..உங்களை சனி சைட் அடிப்பதால் சரக்கடிப்பதை நிறுத்தவும்.ராகு கேதுவோடு இருப்பதால் நீங்கள் மனைவியிடம் சாதுவாக இருப்பது நல்லது.இல்லையென்றால் சேதுவாக மாறுவீர்கள்.அலுவலக ஆணிகள் அதிகரிக்கும்.பக்கத்துக்கு வீட்டு பதுமைகள் பல்லிளிக்கும்.தினமும் நாலு பிச்சைகாரர்களுக்கு பிஸ்ஸா கொடுக்க வேண்டும்.மாசத்தில் ஒருமுறை குடும்பத்துடன் வெளியூர் செல்ல விசா எடுக்க வேண்டும்.உங்களுக்கு உகந்த நிறம் சிவப்பு.உறவிடம் காட்ட கூடாது கடுப்பு.

ரிஷபம்:
      ரிஸ்க் எடுப்பதில் ரஸ்க் சாப்பிடும் ரிஷப ராசி நண்பர்களே....உங்களை குரு குறுகுறுன்னு பார்ப்பதால்,நீங்கள் துறுதுறுன்னு செயல்பட வேண்டும்.சுக்கிரன் உச்சத்தில் இருந்தாலும்,தங்கள் மனைவி உக்கிரத்தில் இருப்பதால் நீங்கள் கொஞ்சம் தூரத்தில் இருப்பது நல்லது.தினமும் நாலு நாய்க்கு நாஷ்டா வாங்கி தரவும்.பாவபட்டவர்களுக்கு பாஸ்தா வாங்கி தரவும்.உங்களுக்கு உகந்த நிறம் பச்சை.அடக்க வேண்டும் உங்கள் பேச்சை.

மிதுனம்:
     ஆதினத்தை புனிதமாய் கருதும் மிதுன ராசி நண்பர்களே....உங்களை சனி சகட்டுமேனிக்கு சாடுவதால் சாமியார்களை நாடுவதை நிறுத்தவும்.ராகுவும்,கேதுவும் தூங்குவதால் இறையாண்மை தங்கள் அறியாமையை எழுப்பிவிடும்.தங்கள் மூளையை மழுப்பிவிடும்.காவி உடையை நம்பி காக்கி சட்டையிடம் அகப்படாதீர்.தினமும் நாலு ஏழைக்கு எள்ளுருண்டை வாங்கி தரவும்.உங்களுக்கு உகந்த நிறம் கருப்பு.உங்கள் உயர்வுக்கு கை கொடுக்கும் உங்கள் உழைப்பு.

சிம்மம்:
     சிங்கள் டீக்கு சிங்கி அடிக்கும் சிம்ம ராசி நண்பர்களே....உங்களில் குரு இடம் மாறுவதால் நீங்கள் தடுமாறுவது சகஜம்.ஆனால் சனி குணம் மாறுவதால்,தாங்கள் தடம் மாறமாட்டீர்கள்,இது நிஜம்.சுக்கிரன் சுத்த விடுவதால் அலைச்சலுக்கு ஆளாவீர்.கடன்காரர்களை சுத்த விடுவதால் அவர்கள் எரிச்சலுக்கும் ஆளாவீர்.தினமும் நாலு பட்டதாரிக்கு பஸ் டிக்கெட் எடு.உங்களுக்கு உகந்த நிறம் மஞ்சள்.உங்களை தேடிவரும் வேலைக்கான அஞ்சல்.

கன்னி:
     கன்னிகள் கழுவி ஊத்தும் கன்னி ராசி நண்பர்களே...உங்களை சனி குனிந்து பார்ப்பதால் நீங்கள் பெண்களை நிமிர்ந்து பார்க்க வேண்டும்.ராகுவை தொடர்ந்து கேதுவும் விலகுவதால் நீங்கள் மாதுவை தொடர்ந்து மதுவிடமும் விலக வேண்டும்.குரு குழப்பமாக உள்ளதால் குத்து விளக்கையும்,குடும்ப விளக்கையும் எண்ணி குடை சாய்வீர்.மண்டை காய்வீர்.தினமும் நாலு பெண்களை தங்கச்சி என அழைக்கவும்.உங்களுக்கு உகந்த நிறம் நீலம்.உனக்கான தேவதை உன்னை தேடி வரும் காலம்.

கடகம்:
      கலகத்தில் பல்கலைக்கழகமான கடக ராசி நண்பர்களே...உங்களை ராகுவும்,கேதுவும் எட்டி பார்ப்பதால் இனி யாரிடமும் கோல்மூட்டி பார்க்க கூடாது.சனி குருவுக்கு குடைச்சல் கொடுப்பதால் தங்கள் பணி(செயல்) பிறருக்கு எரிச்சலை கொடுக்கும்.வீட்டுக்குள் விவாதம் வரும்.கோர்ட்டுக்குள் விவாகரத்து ஆகும்.ஆகையால் கலகத்தை விடுவீர்.கடமையில் ஈடுபடுவீர்.தினமும் நாலு முறை வானத்தை போல படம் பார்க்கவும்.உங்களுக்கு உகந்த நிறம் வெள்ளை.கலகமூட்டினால் வரும் தொல்லை.

துலாம்:
       கலாமினால் கனவு காணும் துலாம் ராசி நண்பர்களே...உங்களை சனி ஓட ஓட விரட்டுவதால்,வெற்றி தன்னை மேலும் தேட வைக்கிறது.உங்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லையெனினும் குருவுக்கு குளிர் காய்ச்சால் என்பதால் உங்களுக்கு ஜலதோஷம் உண்டு.ஒரு பொழப்பும் இல்லையெனினும் வேலைக்காக நாயாய் அலைவதால் நாய் பொழப்பு உண்டு.தினமும் நாலு முறை சூரியவம்சம் பாட்டை(நட்சத்திர ஜன்னலில்) கேளு.உகந்த நிறம் ஊதா.உழைக்காவிட்டால் நீ சோதா.

விருச்சிகம்:
        வீரு கொண்டு வீண்வாதம் செய்யும் விருச்சிக நண்பர்களே...உங்களை குரு குஷியாக பார்ப்பதால் நீங்கள் குருமாவை ருசியாக சுவைக்கலாம்.ராகு,கேது பின்னி பிணைந்திருப்பதால் நீங்கள் தண்ணியும்(சரக்கும்),தண்ணியும் கலந்துருப்பீர்கள்.உங்களை சனி நெருங்குவதால் வராத மழையிலும் விடாது குடை பிடிப்பதை போல்,இல்லாத பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ணும் பந்தாவை  நிறுத்தவும்.தினமும் நான்கு வேலையும் மௌனவிரதம் இருக்கவும்.உகந்த நிறம் ரோஸ்.ஒழுங்காய் வாழ்ந்தால் பாஸ்.

தனுசு:
        தினுசாய் திரியும் தனுஷ ராசி நண்பர்களே...உங்களோடு சனி சரக்கடிப்பதால் இனியோடு பிறரை நோகடிப்பதை நிறுத்தவும்.ராகுவும்,கேதுவும் இரு வேறு திசையில் செல்வதால் உங்களுக்கு பல்வேறு இம்சைகள் வந்துசேரும்.அறிவிப்பின்றி அறிக்கை விட்டு,ஆதரவின்றி அடிவாங்கி வருவீர்.தினமும் நான்கு முறை அன்னா ஹசாரே பற்றிய செய்திகளை படிக்கவும்.உகந்த நிறம் வெள்ளை.பிறரை குற்றம் கண்டால் உன் கண் நொல்லை.

மகரம்:
        தகரத்தை தங்கமாக்க நினைக்கும் மடப்பய மகர ராசி நண்பர்களே...உங்களை சனி சைடுல இருந்து பார்ப்பதால் உங்கள் வீட்டில் ரெய்ட் வர வாய்ப்புண்டு.ராகுவும்,கேதுவும் சண்டை போடுவதால் மதுவும்,மாதுவும் உங்களை போடும்.குரு குனிந்ததால் தங்கள் நம்பிக்கை படுக்க நேரிடும்.தினமும் நான்கு முறை டி.ஆர் பாடல்கள் கேளுங்கள்.உகந்த நிறம் கருப்பு.உழைப்பால் உயர்வதே சிறப்பு.

கும்பம்:
       கும்பலிலே கும்மி அடிக்கும் கும்ப ராசி நேயர்களே...உங்களை ராகு,கேது கோபத்தோடு பார்ப்பதால் பிறர் உங்களை பரிதாபத்தோடு பார்க்க வேண்டிய நிலை வரும்.குரு குரூப்போட சுத்துனாலும்,சனி தனியா வந்து கட்டம் கட்டுவதால் நீங்கள் சோலோவாய் சோக கீதம் பாட வேண்டி வரும்.தினமும் நான்கு முறை மோகன் பாடல்கள் கேளுங்கள்.உகந்த நிறம் அஞ்சல்.தனித்து வாழ பயந்தால் வாழ்வு அந்தரத்தில் ஊஞ்சல்.

மீனம்:
          மீன் பிடித்து மிட்டல் ஆக நினைக்கும் மீன ராசி நண்பர்களே...உங்களில் சனி இடம் மாறுவதால் தங்களின் படகு தடுமாறும் வாய்ப்புள்ளது.குரு கட்டு மரத்தில் கரக்டா வந்தாலும்,குறுக்கே சனி மோட்டார் போட்டில் வந்து மோசம் செய்யும்.இருப்பினும் ராகு,கேது இருப்பதால் படகு கவுந்தாலும் ,எதிர் நீச்சல் போட்டு எஸ்கேப் ஆகிடலாம்.தினமும் நான்கு முறை வலைப்பாயுதே படிக்கவும் ஆனந்த விகடனில்.உகந்த நிறம் நீலம்.முத்துக்கு போகவேண்டும் அடி ஆழம்.

Monday 1 October 2012

ஒசாமாவின் ஓசானா

சத்யா:சபா,வாடா கிளம்புவோம்...

சபா(சபாபதி):எங்கடா?

சத்யா:என்னடா மறந்துட்டியா.இன்னைக்கு என் ஆளு அணுவோட அப்பன் அதான் என் மாமா என்னை மீட் பண்ணனும்னு சொன்னதா அணு சொன்னாலே.மறந்துட்டியா?

சபா:உன்னதான மீட் பண்ணனும்னு சொன்னாரு.என்னய்யா சொன்னாரு.நீ போ.என்னை ஏண்டா  கூப்பிடுற?

சத்யா:என்னடா இப்படி சொல்லிட்டா.நீ இல்லாம நான் எப்படிடா தனியா போவேன்.

சபா:ஏன் அணுவ சைட் அடிக்கும்போது,லவ் பண்ணும்போது,அவளோட ஊர் சுத்தும்போது எல்லாம் என்னையும் கூட கூட்டிட்டு போனியா.

சத்யா:அது..

சபா:இல்லைல.அப்போ ஏன்டா இப்போமட்டும்.அவல பார்க்கிறதுக்கு தனிய போவ.அவங்கப்பன பாக்குறதுக்கு நான் கூட வரணுமா.

சத்யா:பயமா இருக்குடா?

சபா:அவுரு என்ன  அணுவோட அப்பண்ணா இல்லை அணுகுண்டு போடுற வெப்பன்னா.பயப்படுறதுக்கு ..சரி போ,அடி வாங்கனும்னு இருந்தா யாரால மாத்த முடியும்.

சத்யா:கவலைபடாத...நல்லபடியா முடியும்.

சபா:எது நம்ம கதையா?

சத்யா:அட வாடா..

(அணுவின் வீட்டில்)

சத்யா,சபா:வணக்கம் சார்...

அப்பா:வணக்கம்,நீ தான் என் பொண்ணு சொன்ன சத்யா வா?

சத்யா:ஆ..ஆ....ஆமா சார்.

அப்பா:நீங்க யாரு தம்பி?

சபா:நான் யாரோட தம்பியும் இல்லைங்க.வீட்டுக்கு ஒரே பையன்.

அப்பா:ஹ்ம்ம்....ஆமா,சத்யா..நீங்க என்ன பண்ணுறீங்க?

சத்யா:ஒரு கார்மெண்ட்ஸ்ல வேலை பாக்குறேன்.மாசம் 8000 சம்பளம்.

அப்பா:நீங்க?

சபா:இவன் பாக்குற வேலையை வேடிக்கை பாக்குறேன்.

அப்பா:வேடிக்கை பாக்குறீங்களா?

சபா:அட,சூப்பர்வைசர் வேலை என்பதை அப்படி சொன்னேன் சார்.மாசம் 12000  சம்பளம்.

அப்பா:குட்..உங்களபத்தி நான் தெரிஞ்சிகிட்டேன்...என்ன பத்தி உங்களுக்கு எதாவது தெரியுமா?

சபா:ஒ தெரியுமே.நீங்கதான் அணுவோட அப்பா.

அப்பா:அதை கேட்கலை.வேற ஏதாவது தெரியுமா?

சபா:அவ அம்மாவோட புருஷனும் நீங்கதானாமே.

அப்பா:என்னது?

சத்யா:அடேய்...சாரி சார்.இவன் இப்படிதான்.எதாச்சும் உளறுவான்.நீங்க சொல்லுங்க சார்.

அப்பா:எனக்கு ஏகப்பட்ட சொத்துபத்து,தொழில்கள் இருக்கு.ஒரு நாளைக்கு நான் எத்தன கோடி சம்பாதிக்கிறேன்னு எனக்கே தெரியாது.

சபா:ஏன்?

அப்பா:ஏன்னா கணக்கே இல்லாம சம்பாதிக்கிறேன்.

சபா:கணக்கே இல்லாமணா,அப்போ கருப்பு பணமா?

அப்பா:ஷு...நீ வாங்குற சம்பளம் என் வீட்டு நாயோட ஒரு மாச சாப்பாட்டு செலவு.அவ்வளவு ஏன்,என் பொண்..

சபா:உங்க பொண்ணும் அந்த சாப்பாட்டை தான் சாப்பிடுறாங்களா?

அப்பா:ஹ்ம்ம்.....என் பொண்ணோட ஒரு நாள் செலவு நீ வாங்குற 12000 சம்பளம்.இதுல இருந்து என்ன தெரிது?

சபா:உங்க பொண்ணு நல்லா தண்ட செலவு பண்ணும்னு தெரிது.

சத்யா:ஏன்டா..கம்முன்னு இருடா..நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு புரிது சார்.நான் வாங்குற சம்பளத்துல உங்க பொண்ணை சந்தோசமா வச்சிக்க முடியாதுன்னு தானே சொல்றீங்க.

அப்பா:எஸ்.ஏன்,என் வீட்டு வேலைக்காரி கூட 6000 ருபாய் சம்பளம் வாங்குறா தெரியுமா.

சபா:அப்போ அவளை சந்தோசமா வச்சுக்கலாம்னு சொல்றீங்களா.

அப்பா:அஹ,அதுகூட கஷ்டம் தான்.

சபா:ஏன்,அவங்களை நீங்க வச்சுருக்கீங்களா?

அப்பா:ஹலோ..ஹோல்ட் யுவர் டங்(hold ur tongue)

சபா:முதல நீ அடங்.

சத்யா:டேய் சபா...

சபா:இருடா...ஓவரா ஓட்டுறீங்க.எப்பவுமே தேவைக்கு தான் பணம்.பணம் நம்ம தேவையா இருந்திட கூடாது.உங்க பொண்ணுக்கு கோடீஸ்வர மாப்பிள்ளைய பாக்குறீங்கன்னு வச்சிகோங்க.கல்யாணத்துக்கு அப்புறம் அவன் பொண்ணுக விஷயத்துல அப்படி இப்படின்னா என்ன பண்ணுவீங்க.பணக்காரன் தானேன்னு பொண்ணை அட்ஜஸ்ட் பண்ண சொல்வீங்களா.சொல்லுங்க.இல்லைலா.

அப்பா:அதுக்குன்னு இவனுக்கு என் பொண்ணை கட்டி தர சொல்றியா.இவனுக்கு கட்டிக்கிட்டு என் பொண்ணு எப்படி சந்தோசமா இருப்பா?

சத்யா:உங்க பொண்ணு சந்தோசமா இருப்பாளான்னு சொல்ல தெரில சார்.ஆனா கண்டிப்பா கஷ்டப்பட மாட்டா.ஏன்னா அவளுக்கு என்னை பிடிக்கும்.பிடிச்சவங்க கூட வாழ்ந்தா எதுவும் கஷ்டமா தெரியாது.

அப்பா:ஆனா,என் பொண்ணு சந்தோசமாவும் வாழணும்னு நான் நினைக்குறதுல தப்பில்லையே.

அணு:தப்பே இல்லை டாட்.பட் அதே சமயம்,உங்க பொண்ணு புடிச்ச வாழ்க்கைய அவ வாழுறதுலையும் தப்பில்லையே.

அப்பா:உனக்கு பிடிச்சிருக்குங்குற ஒரே காரணத்துக்காக உன்னை அவனுக்கு கட்டி கொடுக்க முடியுமா?

சபா:கட்டி கொடுக்க சொல்லலை.உங்க பொண்ணை கட்டிகிறத்துக்கு ஒரு வாய்ப்பு குடுங்க.அதை வச்சு,தன் தகுதிய வளர்த்துகிட்டு,அப்புறம் உங்க பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கொடுப்பான்.

அப்பா:அப்படி அவன் செய்யலைன்னா?

சபா:அதெல்லாம் செய்வான் சார்.நம்பிக்கை தானே வாழ்க்கை.

அப்பா:இந்த வாழ்க்கை,வாழக்காய் எல்லாம் வேண்டாம்.அவன் அப்படி செய்யலைன்னா?

சத்யா:என் நண்பனை என்ன வேணும்னாலும் செஞ்சுகோங்க..

சபா:என்னது என்னய்யா..?

அப்பா:இது பேச்சு.நீ சொன்ன மாதிரி நடந்துக்கலைன்னா உன் நண்பனை நான் தூக்கிடுவேன்.

சபா:என்னது தூக்கா?

(வீட்டில் இருந்து வெளிவந்த பிறகு)

சபா:டேய் ஒழுங்கா பண்ணிடுவல.

சத்யா:கவலைப்படாதடா.கண்டிப்பா இந்த வாய்ப்ப வீணடிக்க மாட்டேன்.என்ன,இதுலதான் எங்க ரெண்டு பேரு வாழ்க்கை அடங்கி இருக்கு.

சபா:என் வாழ்க்கையும் இதுலதான் டா அடங்கிருக்கு.

சத்யா:ஏண்டா பயப்படுற?

சபா:பின்ன.சும்மா இருந்தவன வாடான்னு வம்படியா கூட்டிட்டு போய் வம்புல மாட்டிவிட்டுட்ட.பயப்படாம என்ன செய்றது.அவங்கப்பன் வேற ஒசாமா கணக்கா தீவிரமா இருக்கான் என்னை தூக்குரதுல.இந்த லவ் தேவையாடா?

சத்யா:டேய்,என்னடா இப்படி கேட்டுட்டா.அவங்கப்பன் ஒசாமாவ இருந்தாலும் என் அணு எனக்கு ஓசானா டா.நிச்சயம்,எங்கள் காதல் கை கூடும்.

சபா:கை கூடனும்.அப்படி கை கூடாம போன,என் தலை காணாம போய்டும் டா.பார்த்து....நம்பி கூட  போனதுக்கு கோர்த்து விட்டானே.ஆத்தா மகமாயி,இவங்களுக்காக இல்லாட்டினாலும் எனக்காகவாச்சும் இந்த காதலை சேர்த்து வச்சு அந்த ஒசாமா கிட்ட இருந்து என் உசுர காப்பாத்து தாயே.