Friday 1 November 2013

நண்பனே என் அன்பனே

நண்பனே என் நண்பனே என் மனம் அறிவாயா நண்பனே.. நண்பனே என் நண்பனே என்னை மனம் முடிப்பாயா நண்பனே

ஒரு குழந்தையை போல உன்னை நினைப்பேன்.
ஒரு தாயை போல அரவணைப்பேன்.
காமம் கடந்தும் காதலிப்பேன்.
என் காலம் முடிந்தும் உன்னுள் கலந்திருப்பேன்.

விடுகதையாக உன் வாழ்விருந்தால்
அதன் விடையாய் என்றும் நான் இருப்பேன்
 தொலை தூர பயணமாய் வாழ்விருந்தால்
உந்தன் வழி துணையாக நான் இருப்பேன்.
தோல் சுருங்கும்காலத்திலும் தோள்  கொடுக்க நான் இருப்பேன்..
நடை தளர்ந்தாலும் மனம் தளராது உன்னை காத்திருப்பேன்.

நண்பனே........என் நண்பனே

உன் இமைகள் மூடும் காலம் வரை நீ
என் கண்களில் இருந்திட வேண்டுமடா
உன் இதயம் துடிப்பது நிற்கும் முன்
என் இமைகள் மூடிட வேண்டுமடா..

என் உயிராய் நீயும் இருக்கனும்டா..
உன் உயிரை நானும் சுமக்கனும்டா..
சின்ன ஊடல்கள் நம்முள் இருந்தாலும்
நம் அன்பை கொஞ்சம் இழந்தாலும்
நட்புடன் என்றும் உன்னை புரிந்திருப்பேன்
காதலும் கொண்டு உன்னுள் வாழ்ந்திருப்பேன்.

நண்பனே என் நண்பனே
மனம் அறிவாயா நண்பனே.. 
நண்பனே என் நண்பனே
மனம் முடிப்பாயா நண்பனே