Wednesday 23 December 2015

களவியுகம்

காமம் : இதுதான் இன்று சமுகத்தில் பெண்களின் நிலையை சீர்குலைக்கும் விஷயங்களில் முதன்மை ஆனதாக இருக்கிறது.

உண்மையில் பெண்கள் படைக்க பட்டது வெறும் காம சுகம் பெறுவதற்காக தானா? காமம் என்பது வெறும் தேகம் சார்ந்த மோகம் நிறைந்த சுகம் மட்டுமேவா? இல்லை.

ஒரு ஆண் தன் ஆண் குறியை பெண் குறியோடு இணைக்கையில் உண்டாகும் உணர்வு மட்டுமே காமம் அல்ல.

மனசும் மனசும் உரசுகையில் உண்டாகும் உணர்வான காதல் போல உடலும் உடலும் உரசுகையில் உண்டாகும் உணர்வே காமம்.

எப்படி காதல் என்பது ஒருவர் தமது மனதினில் இருந்து வெளிப்படும் அன்பை புரிந்தவரிடம் மட்டுமே உணருகிறாரோ, காமத்தையும் அவரிடமே பெற வேண்டும். அவ்வாறு மனம் உணர்ந்த உள்ளங்களிடையே மனமுவந்து காமம் கொள்கையில் அவ்வுறவில் பல உறவுகளின் சங்கமம் இடம்பெறும்.

உறவின் போது சின்ன சின்ன குறும்புகளோடு செய்திடும் சீண்டல்கள் நண்பர்கள் போலும்,
விழியோடு விழி பேச இதழ்கள் இணைகையில் காதலர்கள் போலும்,
உறவின் முடிவில் ஒருவர் நெற்றியில் ஒருவர் மாறி மாறி முத்தம் இடுகையில் தந்தையை போலும்,
அன்பின் அசதியில் தோள்களில் சாய்த்து அரவணைப்பதில் தாயை போலும் உணர்தல் ஏற்படும்.

இத்தகைய உணர்வுகள் இருவரின் மனதிலும் "இனி நீ என்பதும் நான் என்பதும் நாமே" என்றுணர்த்தி இறுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் இருகரம் கொண்டு இறுக்கி அணைக்கையில் "வாழ்வின் எந்த நிலையிலும், உன்னை விட்டு நீங்காது உன்னோடு இணைந்திருப்பேன்" என்ற எண்ணம் ஏற்படும்.

மேலும் காமம், ஆண்-பெண் இருவரும் சமம் என்னும் எண்ணத்தை உடல்கள் வழியே ஆழ்மனதில் அழுத்தமாய் பதிக்கும். அன்பை மனதார பகிரும் ஆண்/பெண் இடம் மட்டுமே ஒரு பெண்/ஆண் இத்தகைய உணர்வை காமத்தில் பெற முடியும்.

மற்றபடி சதையில் சந்தோசம் நாடும் அனைவரும் மார்கழி மாதத்தில் நாக்கை தொங்க போட்டு கொண்டு திரியும் நாய்க்கு ஒப்பானவர்களே.

காமத்தை போதையாகவும், அந்த போதை தரும் கருவியாக பெண்களையும் எண்ணாது..ஆண்-பெண் உறவின் உன்னதத்தை உடல் மற்றும் மனதின் வழியே கற்பிக்கும் கருவியே களவி என உணர்ந்து இருபாலினருக்கும் சமுகத்தில் சமத்துவம் ஏற்படும் வகையில் வரும் ஆண்டுகளில் வாழ்வோம்.

Sunday 22 November 2015

வாழ்க்கை வாழ்வதற்கே

Situation two-A young man with his positive outlook in life.

SONG:

உனக்கென எனக்கென 
தனி உலகம் இல்ல.
இதை உணர்ந்திட்டா 
நமக்குள்ள கலகம் இல்ல.

இருப்பதோ
ஓர் உலகம்.
வாய்ப்பதோ
ஓர் வாழ்க்கை.
மனமிருந்தால் நமக்கு வானம் இல்லை.

கரை தொடாமல் அலை போவதில்லை.
கறை படாமல் யாரும் வாழ்ந்ததில்லை.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
சுற்றம் துறந்தால் வாழ்க்கை இல்லை.

இழக்கத்தான் உயிருண்டு,
ஜெயிக்கத்தான் உலகுண்டு,
வாழ்க்கைதான் நமக்குண்டு,
வா வா வா...வாழ்ந்து பாப்போம்.
சேர்ந்தேதான் உலகை ஜெயிப்போம்.

எனக்குள் ஒருத்(தீ)

Situation one- A young man from Chennai sees a girl and instantly loses his heart. More than her beauty, her resilience in her eyes strikes him the most. His heart soars at this unknown feeling that surely must be love.

SONG:

தீ தீ நீயா..
அந்த ஒருத்தி நீயா..
என் மனதை விழியால் கடத்தி சென்ற ஒருத்தி நீயா.

வலியினில் துடித்திடும் 
விழியினில் தெரிந்திடும்
உன் உறுதிக்கு வியந்தேன் தோழியே..

எதிர்வரும் தடைகளை
எதிர்த்திடும் துணிவினை
உன் செயல்வழி உணர்ந்தேன் தோழியே..

எதையும் தாங்கும் இதயம் உனக்கு..
உன்னை தாங்கும் இதயம் எனக்கு..
உன்மேல் கொண்டேன் காதல் கிறுக்கு..
ஏற்றுகொள்ளடி தோழியே தோழியே.. 

தீ தீ நீயா..
அந்த ஒருத்தி நீயா..
என் மனதை விழியால் கடத்தி சென்ற ஒருத்தி நீயா..

Tuesday 3 November 2015

வக்கிரத்தின் வலி

வணிக நகர வாலிபன்
கணினியில் தொலைத்த கண்ணை மீண்டெடுத்து
இரவு நேர உலா செல்ல,

கண்ணெதிர உலகத்தை உள்ளடுக்கும் அலைப்பேசியில்
நவநாகரிக பெண் ஒருத்தி அளவளாவ..
வைத்த கண் வாங்காது
உடலின் அமைப்பை உடையின் அளவோடு ரசித்தபடி
"செம பீஸ்" என கூறிக்கொண்டு நடை பயணிக்க,

கண்ணுக்கு விருந்தளித்த மனசு வயித்துக்கும் விருந்தளிக்க தூண்ட
தள்ளுவண்டியில் நடுத்தர வர்கத்தின் நட்சத்திர உணவகத்தில்
சில பல தோசைகளை முழுங்கிய வாறே
அன்னமிட்ட அஞ்சலையின் அங்கத்தை
உணவின் சூட்டோடு சூடாக ரசித்தபடி
மனதுக்குள் "நாட்டு கட்டை" என்று எண்ணியவன்,

புகை போட பொட்டிகடை செல்ல
அருகில் தெரு சுத்தம் செய்யும் பெண்ணின்
சரிசெய்யப்படா ஆடைவழியே தெரியும் இடையை
இமை கொண்டு இச்சித்த படி "சூப்பர் பிகரு" என நகர்ந்தவன் கண்ணில்

கணினி கம்பெனி கன்னி காரில் வந்திறங்க,
ஆங்கிலேயர் கீழ் பணிபுரிபவள்
ஆங்கிலேயனுக்கே பணிபுரிபவலாய் எண்ணி "ஐயிட்டம்" என முனுகிகொண்டே நடக்க.
 அலைப்பேசியில் மணி அடிக்க,
"ஏரியா பசங்க கிண்டல் பண்ணிச்சின்னு தங்கச்சி தற்கொலை பண்ணிகிட்டா"ன்னு அம்மா குரல் ஒலிக்க,

ஒரு கணம் அவன் மனதில் பெண் குறித்த தன் வக்கிரத்தால் வலி உண்டாவதை உணர்ந்தான்.

Tuesday 31 December 2013

அன்புடன் 2013

அனைவருக்கும் வணக்கம்,

நான்தான் 2013,

சாதிக்கணும்னு நினச்ச பலரோட கனவுகளுக்கு கை கொடுத்தேன்.சிலரோட ஆசைகளுக்கு ஆப்பு வச்ச்சேன்  (இதை எழுதுற @tigerthia-க்கும் சேர்த்துதான்).

தேஞ்சி போன அரசியல்வாதிகள் முதல் காய்ஞ்சி போன காம பிசாசுகள் வரை பல்லு முளைக்காத குட்டிகள்ல ஆரம்பிச்சி பல்லு போன பாட்டிகள் வரை ஒருத்தரை விடாம வயசு கணக்கா,சைசு கணக்கா பாரபட்சம் பார்க்காம காத்து கருப்பு மாதிரி வந்து காசு,கற்ப்பு களவாடி தேசத்தை சேதபடுதிட்டாணுக.என்னதான் ரைமிங்கா சொன்னாலும் ரணம் இருக்கு நெஞ்சுக்குள்ள..எல்லாத்தையும் பார்த்திட்டு,படிச்சிட்டு வெறும் வார்த்தைகள்ல மட்டும் வேதனையை வெளிபடுதிட்டு போற இயலாமை ஈஈனு இளிச்சிகிட்டு,இழிவுபடுதிகிட்டு இருக்கு உங்களை..

கலவி தரத்தோட வளர்ச்சி கல்வி கூடங்களின் கட்டிடங்களின் தரத்தில் தான் பார்க்க படுகிறது இன்னும் ஊருல..building strong..teaching weak கதை தான் தொடருது.இந்த சோக கதையை தாண்டியும் சில சாதனை கதைகள் இடம்பெறத்தான்  செய்யுது...படிக்க வசதிஇல்லாத இடத்துல சாதிக்க மனசு உள்ள வயசுல உள்ள மாணவர்கள் செய்யும் சாதனை அபாரமானது.ஆனால அவர்களுக்கு கை கொடுக்காமல்,உயர செல்ல தடை விதிக்கும் நம் கல்வி திட்டமும்,அந்த திட்டத்துக்கு தீனி போடும் அறிவில்லா அதிமேதாவிகளின் கொட்டமும் அகோரமானது.

காதலும்,கடலையும் சார்ந்த காலேஜ் மாணவர்களின் சமுக அக்கறையும், தமிழ் உணர்வும் ஈழ போராட்டத்தில் லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டத்தின் மூலமும்,அதற்க்கு ஆதரவு தெரிவித்து தமிழக அணைத்து கல்லூரிகளின் போராட்டத்திலும் வெளிப்பட்டபோது "அவனுக்குள்ளயும் என்னமோ இருந்துருக்கு பாரேன்" நினைப்பு தான்..சூப்பர் பா..

ஆனா அதுக்குகுட லீவ் விடாம,எங்களை லீவ் போடவும் விடாம உக்கார வச்சி வேலை கொடுத்து இம்சை கொடுத்த அயல் நாட்டு அப்பாடேக்கர்கள் அதான் MNC நிறுவன நல்லுள்ளங்களுக்கு கோடான கோடி கும்பிடுகள்..மோசம் பா..

ஆரம்பத்துல சாம்பியன் கோப்பை கைபற்றி வெற்றிகரமா ஆரம்பிச்சாலும் போக போக சுறா தேய்ஞ்சி சுண்டெலி ஆன கதைதான்.ஆஸ்திரேலியா,மேற்கு இந்திய அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ஜொலித்தாலும்,தென் ஆப்ரிக்கா தொடரில் பல்லிளிக்கும் படி சொதப்பிவிட்டனர்...சச்சின் என்னும் மந்திர சொல் கடைசி முறை கிரிக்கெட் மைதானத்தில் ஒலித்ததும்,காலிஸ்  என்னும் ஜாம்பவான் விடை பெட்ட்றதும் ஒரு சுகமானா சோகம்.விஸ்வநாதன் ஆனந்த் ஆட்டம் கே.வீ .ஆனந்த் மாற்றான் போல் பெரும் எதிர்பார்ப்போடு வந்து பப்படம் ஆகிவிட்டது...சரிவென்பது சகஜம்.அதை நீங்கள் வெல்வீர் என்பது நிச்சயம்.இறகு பந்தாட்டம் (badminton ) வியாபாரம் ஆக்கபட்டதின் பெரும் பங்கு IPL போய்  சேரும்..இருப்பினும் பல திறமைகள் வெளிச்சத்துக்கு வந்து இருக்கிறது (இப்படித்தாண்ட IPL ஆரம்பிச்சோம்)..விளையாட்டு வினால் ஆனால் கூட பரவாயில்லை.வியாபாரம் ஆனால் ஆசை அறுபது நாள்,மோகம் முப்பது நாள் கதைதான்.

நம்ம ஊர் விஞ்ஞானிகள் விடும் ராக்கெட்டை விட வேகமாக மேல செல்கிறது தங்கம் விலை.அதுக்கு கீழே கொஞ்சம் வேகமாக செல்கிறது காய்கறிகள் விலை.நடுத்தர வர்க்கம் இனி நடுதெருவுக்குத்தான் வருகும்.

தலைவான்னு பேரு போட்டதுக்கே பாம் போடுறேன்னு சொன்ன புரட்சி புயல்கள் அடுத்த முதல்வர்,அடுத்த பிரதமர்,அடுத்த பீதமகர்..அம்புட்டு ஏன்..கடவுள்ன்னு கூட பேன்னர்,போஸ்டர் ஓடும்போது பாம் இல்லை சாணி கூட அடிக்கலை...விஸ்வரூபம் படத்தை எடுப்பதற்கு விட,அதை வெளியிடுவதற்கு கமல் எடுத்த முயற்சிகள் ஹாலிவுட்டே அதிர அளவுக்கு இருந்துச்சி.நாட்டை விட்டே போற அளவுக்கு புண்படுதிட்டாணுக..அப்படி என்னதாண்ட அந்த ரெண்டு படத்துலயும் இருக்குதுன்னு பார்த்தா பாம் இல்லை..பிஜ்லி வெடி வைக்குற அளவுக்கு கூட சமாசாரம் எதுவுமில்லை பெருசா...தனக்கு விளம்பரம் தேடுறேன்னு பேருல படத்துக்கு விளம்பரம் பண்ணிட்டணுக.யாரு பேத புள்ளையோ..நல்லா இருக்கணும் சாமி..பார்ட்-2 வர போகுதாம்..ரெடி யா..

ஒவ்வொரு வருஷமும் கடந்து போகும்போது நமக்கு சொல்லிட்டு போறது ஒரே விஷயம் தான்.அதைதான் நானும் சொல்லபோறேன்..என் வருஷத்துல இருந்த நீ அடுத்த வருஷத்துல இருப்பியானே தெரியாது..அப்புறம் ஏன் இந்த கொலை,கொள்ளை,வஞ்சம்,வெறி,காமம்,லஞ்சம்,துரோகம் எல்லாம்...அடுத்த வருஷம் இருந்தா மனிதனாக வாழ முயற்சி செய்.மிருகமா,அடிமையாய் வாழாதே...2014 - உங்களை அன்புடன் வரவேற்க காத்திட்டு இருக்கு..சென்று வருகிறேன்.


இப்படிக்கு
2013  

Friday 1 November 2013

நண்பனே என் அன்பனே

நண்பனே என் நண்பனே என் மனம் அறிவாயா நண்பனே.. நண்பனே என் நண்பனே என்னை மனம் முடிப்பாயா நண்பனே

ஒரு குழந்தையை போல உன்னை நினைப்பேன்.
ஒரு தாயை போல அரவணைப்பேன்.
காமம் கடந்தும் காதலிப்பேன்.
என் காலம் முடிந்தும் உன்னுள் கலந்திருப்பேன்.

விடுகதையாக உன் வாழ்விருந்தால்
அதன் விடையாய் என்றும் நான் இருப்பேன்
 தொலை தூர பயணமாய் வாழ்விருந்தால்
உந்தன் வழி துணையாக நான் இருப்பேன்.
தோல் சுருங்கும்காலத்திலும் தோள்  கொடுக்க நான் இருப்பேன்..
நடை தளர்ந்தாலும் மனம் தளராது உன்னை காத்திருப்பேன்.

நண்பனே........என் நண்பனே

உன் இமைகள் மூடும் காலம் வரை நீ
என் கண்களில் இருந்திட வேண்டுமடா
உன் இதயம் துடிப்பது நிற்கும் முன்
என் இமைகள் மூடிட வேண்டுமடா..

என் உயிராய் நீயும் இருக்கனும்டா..
உன் உயிரை நானும் சுமக்கனும்டா..
சின்ன ஊடல்கள் நம்முள் இருந்தாலும்
நம் அன்பை கொஞ்சம் இழந்தாலும்
நட்புடன் என்றும் உன்னை புரிந்திருப்பேன்
காதலும் கொண்டு உன்னுள் வாழ்ந்திருப்பேன்.

நண்பனே என் நண்பனே
மனம் அறிவாயா நண்பனே.. 
நண்பனே என் நண்பனே
மனம் முடிப்பாயா நண்பனே

Saturday 24 November 2012

PROPOSAL FORM

PROPOSAL FORM
APPROVED BY VALENTINES GROUP OF COMPANIES


NAME OF PROPOSEE:
(Name should be written in capital letters)

*AGE:

ADDRESS:

*MOBILE NO:

  PHONE NO:

 *EMAIL-ID:


PROPOSAL QUALIFICATION

                                   DAILY                    WEEKLY                   MONTHLY
*DATING:

*CHATING:

*SHOPPING:


PREVIOUS EXPERIENCE

PLACE     YEAR OF PROPOSAL      YEAR OF APPROVAL      YEAR OF BREAK-UP 






PERSONAL DETAILS

RELATION     OCCUPATION       REMUNERATION        LOCATION

FATHER

MOTHER

BROTHER

SISTER

*COUSIN 
SISTER/BROTHER

*FRIENDS


PROPOSERS DETAILS

NAME:

*AGE:

ADDRESS:

MOBILE:

EMAIL-ID:


IMPORTANT NOTES:
Form has to be fill by Blood(Any kind of bloog group is applicable if dont have HIV+).
Proposers income should be within 2.5 lakhs P.A
Proposers should not have any ambition to achieve except marriage.
Proposers family income should be above 8-10 lakhs P.A

DOCUMENTS NEEDED:
Both Proposee n Proposer should need to attach their Salary Slip.
Age proof(Voter ID,Birth Certificate,License etc)
Medical Report
Bank statement and Pass Book