சேகர்:உங்கம்மாக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.மளிகை சாமான் லிஸ்ட் ல அளவு ஜாக்கெட் துணி பத்தி எழுதி வச்சுருக்கா.கடைக்காரன் என்னைப்பார்த்து சிரிக்குறான்.
அருண்:அட,அம்மாக்கு வயசாகுதுல..அதான் மறந்து போய் எழுதி இருப்பாங்க.
சேகர்:ஏன் எனக்கும் தான் வயசாகுது.நான் எதையாச்சும் மறந்தேனா?
(shift to home)
அமுதா:அவுரு எதைத்தான் மறக்கலை.தலைக்கு தேய்க்கிற எண்ணெய்ல இருந்து காலுக்கு போடுற செப்பல் வரைக்கும் ஒவ்வொண்ணுத்தையும் எங்கயாச்சும் மறந்து வச்சிட்டு,பின்னாடி.."அமுதா,இங்க வச்ச சீப்ப பார்த்தியா,சோப்ப பார்த்தியான்னு" கேட்குறது..இதுல என்ன சொல்றாரு.
அஞ்சலி:பின்ன மளிகை சாமான் லிஸ்ட்ல ஜாக்கெட் துணி பத்தி எழுதுனா என்ன சொல்றதாம்.
அமுதா:தெரிஞ்சா எழுதுனோம்.ஏகப்பட்ட வேலை..ஏதோ குழப்பத்துல அப்படி எழுதிட்டேன்.இதுக்கு போய் கத்துறாரு..
அஞ்சலி:ஐயோ,அம்மா..அப்பா திடீர்ன்னு வந்திட கிந்திட போறாரு.அப்புறம் நீ பேசுறதை கேட்டுட்டாருன்னு வை...
அமுதா:கேட்டாருன்னா என்ன...என்னை திட்டிடுவாரோ..
(back to road)
சேகர்:திட்டாம,தூக்கி வச்சி கொஞ்ச சொல்றியா.அன்னைக்கு அப்படிதான் டி.நகர் போயிட்டு துணிமணி,நகை எல்லாம் வாங்கிட்டு பஸ் ல வரும்போது பையை தொலைச்சிட்டா.நல்லவேளை போனது துணிப்பையா போச்சு.நகை பையா இருந்துருந்தா..
அருண்:அதான் போலையே..
சேகர்:அடிச்சேன்னா...போலையாமே..போய் இருந்தா என்ன பண்ணுவ.தங்கம் விக்குற விலைக்கு,நம்மள மாதிரி ஆளுகளுக்கு,ஒரு கிராம் கூட ஒரு கிலோ தான்.அப்படி இருக்கையில பத்து சவரன் நகை.ரொம்ப சாதாரணமா சொல்ற.
அருண்:அப்படி இல்லப்பா...அம்மாக்கும் அன்னைக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.வேணும்னா பண்ணாங்க.ஏதோ நினப்புல மறந்திடுறாங்க.
சேகர்:என்னடா நினைப்பு..ஒரு பொண்ணுக்கு அவ புருஷன்,புள்ளைகுட்டி,குடும்பம் பத்தின நினைப்புதான் எப்பவும் இருக்கும்.நாமதான் அவ கூடவே இருக்கோம்ல.அப்புறம் நம்மளை விடவும் வேற என்ன நினைப்பு வேண்டிகிடக்கு?
(back to home)
அமுதா:வேற நினைப்பே இருக்க கூடாதா.போன வாரம் என் தம்பி வந்தான்ல.முகம் குடுத்து நாலு வார்த்தை முழுசா பேசுனாரா.ஏதோ வேண்டா வெறுப்பால பேசுனாரு.பாவம் அவன் முகமே வாடிபோச்சு.அதை நினைச்சாலே மனசுக்கு கஷ்டமா இருக்கு.கொஞ்சம் இறங்கி போனாதான் என்னவாம்?
(back to road)
சேகர்:எதுக்கு இறங்கி போகணும்.நாம தப்பு பண்ணி இருந்தா,ஏதோ ஈகோ பார்க்காம இறங்கி போய் மன்னிப்பு கேட்கலாம்.தப்பு பண்ணது பூரா உங்கம்மாதான்.அப்புறம் நான் இறங்கி போகணும்னா எப்படி.அவளுக்கு அப்படி என்னடா கோபம்.
அருண்:அம்மாவோட கோபமே நீங்க மாமா கிட்ட கோபப்பட்டது தான்.
சேகர்:அதுக்கு நான் காரணம் இல்லை.அவன் பொண்ணு மீனுவுக்கு மஞ்சள் நீராட்டு விழாவுக்கு ஒரு நாள் லேட்டா போயிட்டேன்.ஆனாலும் உங்களை முன்னாடி அனுப்பி வச்சுட்டேன்ல.அதப்பார்க்கலை,நான் லேட்டா வந்துட்டேன் என்பதை மட்டும் புடிச்சிக்கிட்டு அந்த குதி குதிச்சான்.அதான் கோபம்.அதுக்குன்னு வீட்டுக்கு வரவேண்டாம்னு சொன்னேன்னா இல்லை வந்தபோது பேசாம போனேன்னா.எல்லாம் யாருக்காக.அவளுக்காக தான.இதை புரிஞ்சிக்காம என்மேல தப்புன்னா..
(back to home)
அமுதா:அவர் மேலதான் தப்பு.ஏதோ தெரியாம கோபத்துல கத்திட்டான்.ஏன் இவுருகூட தான் தினமும் கத்துறாரு.அதுக்குன்னு நாம கோபப்பட்டு பேசாம கிடக்கோமா.நல்லாதானே பேசுறோம்.இவுருக்கு மட்டும் என்னவாம்.
அஞ்சலி:என்னம்மா,அப்பா மாமா கிட்ட சரியாய் பேசலைன்னாலும் மீனுகிட்ட நல்லாதானே பேசுனாரு.அவளை ஆசிர்வாதம் பண்ணி புது டிரஸ் எல்லாம் குடுத்தாருல.
அமுதா:அதை நான் ஒன்னும் சொல்லலையே.அந்த விஷயத்துல உங்கப்பாவ குறை சொல்ல முடியாது.என்ன கோபம் வந்தாதான் கிறுக்கு பிடிச்சிடும் அந்த மனுஷனுக்கு..
அஞ்சலி:அம்மா,அம்மா...உஸ்ஸ்ஸ்...அப்பா வராரு.
சேகர்:அஞ்சலி,இந்தா மளிகை சாமான்.எல்லாம் சரியாய் இருக்கான்னு ஒருவாட்டி பார்த்துக்க சொல்லு.அப்புறம் அது இல்லை,இது இல்லைன்னு எப்பவும் போல எதையாச்சும் மறந்திட்டு கத்தபோறாங்க.
அமுதா:அருண்னு,நாங்கலாம் எப்பவாச்சும் தான் மறப்போம்.எப்பவும் மறக்கிற பழக்கம் அவுருக்குதான்னு சொல்லு.கொண்டாடி லிஸ்ட்ட.
அஞ்சலி:நீங்க ரெண்டு பேருமே சரியான ஞாபக மறதிதான்.
சேகர்.அமுதா:என்ன சொல்ற?
அருண்:ஆமாம்.அவ சொல்றது சரிதான்.அதை மறந்திட்ட,இதை மறந்திட்டேன்னு ஒருத்தரை ஒருத்தர் திட்டிகிறீங்கள்ள.இன்னைக்கு உங்க கல்யாண நாள் என்பதை நீங்க ரெண்டு பேருமே மறந்துடீங்கலே.இப்போ என்ன சொல்றதாம் உங்களை.
சேகர்:அட ஆமா...
அஞ்சலி:ஹிஹி.இந்தாங்க உங்களுக்காக வாங்குன கேக்.எங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு,இந்த கேக்கை வெட்டுங்க ரெண்டு பேரும் சேர்ந்து.
அமுதா:ஆமா,அது ஒண்ணுதான் குறைச்சல் இப்போ.போடா...
அருண்:அம்மா....
(அம்மாவின் கையை பிடித்து செல்ல கோபத்தோடு பார்க்க)
சேகர்:சரி,சரி..அதான் பசங்க ஆசைபடுறாங்கள்ள.வா இங்க.
(இருவரும் சேர்ந்து பிள்ளைகளை ஆசிர்வதித்து,கேக்கை வெட்டி பிள்ளைகளுக்கு ஊட்டிவிட்ட பின்னர்)
அருண்:இப்போ நீங்க ஒருத்தருக்கு ஒருத்தர் ஊட்டிகொங்க.
அமுதா:அதெல்லாம் முடியாது.
சேகர்:அட,பசங்க ஆசைபடுதுல.சும்மா அலட்டிக்காத..இந்த ஆ.ஆ......அவ்வளவுதான்.இப்போ எனக்கு ஊட்டு...முறைக்காத...பசங்க ஆசைபடுதுல.
அமுதா:ஆமா,ஆசை படுறது நீங்க.சும்மா பசங்க ஆசைபடுதுல..பசங்க ஆசைபடுதுலன்னு அவங்களை காரணம் சொல்லுவீங்க...ரொம்பதான்...இந்தாங்க..ஆ.ஆ...ஹஹஹஹா...
அருண்:இப்படியா கல்யாண நாளை கூட மறக்கிற அளவுக்கு சண்டை போடுவாங்க.
அமுதா:டேய்,சும்மா இருடா.என்னதான் அதை மறந்துட்டோம்,இதை மறந்துட்டோம்னு சண்டை போட்டாலும்,என்னை அவுரும்,அவரை நானும் எப்பவும் மறக்க மாட்டோம்.அதான் முக்கியம்.
சேகர்:சரியாய் சொன்ன அமுதா....
அஞ்சலி:ஆஹா,ஒன்னு கூடிட்டாங்கையா..ஒன்னு கூடிட்டாங்கையா.....இப்படியே பேசிகிட்டு நடுவுல எங்களை மறந்துடாதீங்க.
சேகர்,அமுதா,அருண்,அஞ்சலி:ஹஹஹஹஹஹஹஹஹஹாஆ
மலையளவு பிரச்சனையும் கடுகளவு சுருங்கி போகும் அன்பு வெளிப்படும்போது.
அன்புக்குண்டோ அடைக்கும் தாழ்,அந்த அன்பு பெருகும் நாம் இணைந்தால்.வணக்கம்.