Friday, 10 August 2012

ரோமேன்ஸ் 

புதிதாய் ஒரு பரவசம் 
புது உலகில் என் பிரவேசம் 

மேலே நிர்வாணமான வானம் 
வெண்மேகத்தை புத்தாடையாய் உடுத்திக்கொள்ள 
கீழே நீலக்கடல் கரை வந்து கரகோஷம் எழுப்ப 

வீசுகின்ற தென்றல் காற்றும் 
தேகத்தினுள் உரசி செல்ல 

கூச்சலிடும் மனிதர்கள் பேச்சும் 
கீச்சுகின்ற பறவையாய் தோன்ற 
அகிலமே அழகாய் தெரிந்தது 
என் அழகி என் அருகில் அமர்ந்ததும் 

கருப்பு கூட அழகு என்று 
அவள் கூந்தல் அசையும் போது புரிந்தது 
சிகப்பு கூட சிறப்பு என்று 
அவள் கன்னம் சிவக்கும் போது புரிந்தது 
வெண்மை கூட எளிமை என்று 
அவள் சின்ன சிரிப்பின் போது புரிந்தது 
நானும் கூட கவிஞன் என்று 
அவளை நினைக்கும் போது புரிந்தது 
அவளும் என் தாய்தான் என்று 
என் வலியால் அவள் விழியில் தெரிந்தது 

அவள் இமை போன போக்கிலே 
என் இதயமும் உடன் பயணித்தது 
அவள் கரம் பிடிக்கும் நோக்கிலே 
என் விரல்களும் விரல் கோர்க்கிது 

வாஞ்சையுடன் என் நெஞ்சில் சாய்ந்ததும் 
பிஞ்சு குழந்தையின் ஸ்பரிசம் உணர்ந்தேன் 
முகத்திலே அவள் முடியும் படர்ந்ததும் 
மயில் தோகையின் வருடல் உணர்ந்தேன் 

உடல்களும் இருக்கமாய் இருந்தும் 
உள்ளமோ இறகாய் இருந்தது 
வெட்கம் அவள் இமைகளில் இருந்தும் 
வெட்கப்பட்டு மறைவில் இருந்தது 

என்னைவிட என்னை நேசிக்க 
காதல் கொண்ட தாயும் நீயே 
என்னுள் என்னை நானே கண்டிட 
காதல் தந்த சேயும் நீயே 

No comments:

Post a Comment